பக்கிங்ஹாம் கால்வாய் வழக்கு.. ஜூன் 10க்குள் ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற சென்னை ஹைகோர்ட் உத்தரவு!
சென்னை பக்கிங்ஹாம் கால்வாயிலிருந்து ஜூன் 10க்குள் ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை: சென்னை பக்கிங்ஹாம் கால்வாயிலிருந்து ஜூன் 10க்குள் ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை ஆர்.ஏ புரம் பக்கிங்காம் கால்வாயிலும் ஏராளமான வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதால் மழை காலங்களில் வெள்ள நீர் வீதிகளுக்கு வந்து விடுவது வழக்கம். மழைக்காலங்களில் அதிக அளவில் பாதிப்பை சந்திப்பது இந்த ஆக்கிரமிப்பு வீடுகளில் வசிப்பவர்களே.

இதனால் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும், தொழிற்சாலை கழிவுகளை கொட்டுவதை தடுக்க கோரியும் சென்னை ஹைகோர்ட்டிலும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நிறைய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்த நிலையில் இந்த தீர்ப்பை மறுசீராய்வு செய்ய கோரி சென்னை ஹைகோர்ட்டில் 100க்கும் மேற்பட்ட நபர்கள் மனுதாக்கல் செய்தனர். இவர்கள் எல்லோரும் ஆர்.ஏ புரம் பக்கிங்காம் கால்வாய் பகுதியில் வசித்து வருகிறார்கள்.
இந்த மறுசீராய்வு மனுக்கள் மீதான வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்படி சென்னை பக்கிங்ஹாம் கால்வாயிலிருந்து ஜூன் 10க்குள் ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உடனடியாக இவர்கள் அரசு வழங்கி இருக்கும் குடிசை மாற்று வாரியத்திற்கு செல்ல வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இவர்கள் ஆக்கிரமிப்புகளை காலி செய்யவில்லை என்றால் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் நிறுத்தப்படும், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications