கால்நடை மருத்துவ படிப்புகள்..ஆன்லைனில் இன்று முதல் விண்ணப்பம் - செப்.26 ல் கடைசி தேதி
சென்னை: கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. adm.tanuvas.ac.in என்ற இணையத்தளத்தில் இன்று முதல் 26-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
இவற்றில் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்புப் படிப்பு (பி.வி.எஸ்சி - ஏ.ஹெச்), உணவு, கோழியினம், பால்வள தொழில்நுட்பப் படிப்புகள் உள்ளன. இவற்றுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்புப் படிப்புக்கு 480 இடங்கள் உள்ளன. இவற்றில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 72 இடங்கள் போக, மீதமுள்ள 408 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன.
வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பு மூலம் நல்ல வருமானத்தை ஈட்டலாம். இதன்மூலம் ஆண்டுதோறும் நமக்கு வருமானம் கிடைக்கும். அதனாலேயே இது வேளாண் அமைப்பின் முக்கிய அங்கமாக இருக்கிறது. கால்நடை மருத்துவம் பயில, இன்று அநேகர் விரும்புகிறார்கள்.
கால்நடைப் பராமரிப்புத் துறையில் கால்நடை உதவி மருத்துவர் வேலையில் சேரலாம். இந்திய அளவிலும் கால்நடை மருத்துவருக்கான பல்வேறு பணியிடங்கள் உள்ளன. நிறைய ஆய்வகங்களிலும் அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் உள்ளன. தனியார் துறையைப் பொறுத்தவரை கோழிப்பண்ணை, குதிரைப் பண்ணை, தடுப்பு ஊசி மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், வங்கி, காப்பீட்டு நிறுவனங்கள் போன்ற இடங்களில் வேலைவாய்ப்புகள் உண்டு. சிலர் இந்திய ஆட்சிப் பணியில் இருக்கிறார்கள்.
கால்நடை மருத்துவம் மட்டுமல்ல தொழில்நுட்பம் படிப்பவர்களுக்கும் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உண்டு. பால்வளத் துறை, உணவு பதனிடும் துறை, கோழி இனம் சம்பந்தப்பட்ட துறை என அனைவருக்கும் வேலைவாய்ப்புகள் உள்ளதால் கால்நடை மருத்துவ அறிவியல் படிக்க அதிகம் பேர் ஆர்வம் காட்டுகின்றனர்.
கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. adm.tanuvas.ac.in என்ற இணையத்தளத்தில் இன்று முதல் 26-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications