காவிரி நீர் மேலாண்மை ஆணையம்.. ஜலசக்தித் துறைக்கு கீழ் கொண்டு வந்த மத்திய அரசு.. பரபரப்பு உத்தரவு!
தன்னிச்சையான அதிகாரம் கொண்ட ஆணையமான காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜலசக்தித் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை: தன்னிச்சையான அதிகாரம் கொண்ட ஆணையமான காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜலசக்தித் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
26 வருட தமிழகத்தின் தண்ணீர் போராட்டம் மொத்தமாக தோல்வி அடையும் நிலைக்கு சென்று இருக்கிறது. காவிரி நீருக்காக தமிழகத்தின் அதிமுக மற்றும் திமுக அரசுகள் மாறி மாறி சட்ட ரீதியாக போராட்டங்கள் செய்து வந்தது. 26 வருடமாக செய்து வந்த இந்த போராட்டத்தின் முடிவில் காவிரி காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது.

காவிரி வாரியம் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் கடைசியாக காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. 26 வருடம் நடந்த இந்த சட்ட போராட்டத்தில் தமிழகம் ஒரு வகையில் வெற்றி பெற்றது என்றுதான் கூற வேண்டும்.
இந்த சட்ட போராட்டத்தின் முடிவில் கடந்த 1.6.2018 அன்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. அதே நாள், இது தொடர்பான அறிவிப்பு மத்திய அரசு இதழில் வெளியிடப்பட்டது. உச்ச நீதிமன்ற இறுதி உத்தரவின்படி இந்த காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என்பது சுதந்திரமாக செயல்பட கூடிய தன்னிச்சையான அமைப்பு ஆகும்.
ஆணையத்தின் அதிகாரம் மற்றும் பணிகள் அனைத்தும் காவிரி நடுவர் மன்றம் உத்தரவிட்ட தீர்ப்பின் படியே செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் எடுக்கும் முடிவே இறுதியானது. இதில் மாநில அரசோ, மத்திய அரசோ தலையிட முடியாது.
இரண்டு மாநில உறுப்பினர்களும், இதற்கான குழு தலைவரும் இதில் இடம்பெற்று இருப்பார். அதேபோல் காவிரியில் எவ்வளவு நீரை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று இந்த காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவை வழங்கும்.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக தன்னிச்சையான அதிகாரம் கொண்ட ஆணையமான காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜலசக்தித் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில், மத்திய ஜல் சக்தித் துறையின் கட்டுப்பாட்டுக்குள் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை கொண்டு வந்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த ஆணையம் அமைக்கப்பட்டதன் நோக்கத்தையே சிதைக்கும் வகையில் இந்த உத்தரவு இடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஆணையத்தின் சக்தி பறிக்கப்பட வாய்ப்புள்ளது. அதேபோல் இந்த ஆணையத்தின் சுதந்திர தன்மை , முடிவு எடுக்கும் அதிகாரம் கட்டுப்படுத்த வாய்ப்புள்ளதாக கண்டனங்கள் எதிரொலிக்கின்றன. தமிழ்கத்தின் 26 வருட சட்ட போராட்டம் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications