டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய விஜய்க்கு சிபிஐ அதிர்ச்சி – மீண்டும் பறந்த சம்மன்
டெல்லி: கரூர் மாவட்டத்தில் கடந்த 2025 செப்டம்பர் நடைபெற்ற தவெக கூட்டத்தில் சிக்கி 41 மக்கள் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. பல்வேறு தரப்பினருக்கு சிபிஐ சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது. அந்த வகையில் தவெக தலைவர் விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். அவரிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பொங்கல் பண்டிகைக்கு பிறகு அவரிடம் மீண்டும் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் விரைவில் 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் பரபரப்பான வியூகங்களுடன் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் முயற்சி செய்கின்றன. அவர்களுடன் தவெக மற்றும் நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் வேகம் காட்டுகிறது.

ஜனநாயகன் படம் பிரச்சனை
தீவிர திமுக எதிர்ப்பை கையில் எடுத்து விஜய் களமிறங்கியுள்ளார். அவரை அதிமுக - பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி பக்கம் இழுப்பதற்கு முயற்சிகள் நடக்கின்றன. ஆனால் பாஜகவை கொள்கை எதிரி என்று அறிவித்திருப்பதால் அவர்களுடன் கூட்டணி இல்லை என்று தவெக அறிவித்துள்ளது. விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிப்பவர்களுடன் தான் கூட்டணி என்றும் கூறியுள்ளனர்.
விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் கடந்த 9 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டது. தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்காத காரணத்தால் படம் வெளியாகவில்லை. சென்னை உயர் நீதிமன்றம் படத்திற்கு இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து படக்குழு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. தணிக்கை வாரியம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
விஜய்யிடம் சிபிஐ விசாரணை
மறுபக்கம் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணையை சிபிஐ தீவிரப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய்யிடம் நேற்று சுமார் 7 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யை தங்கள் பக்கம் இழுப்பதற்காக பாஜக நெருக்கடி கொடுப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
இதேபோல காவல்துறை அதிகாரிகள் டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்டோரிடமும் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணைக்கு பிறகு விஜய் டெல்லியில் இருந்து இன்று சென்னை திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு விஜய்யிடம் மீண்டும் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
மீண்டும் சம்மன்
அதன்படி விஜய்யிடம் வருகிற ஜனவரி 19 ஆம் தேதி விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளனர். இதற்காக சிபிஐ அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தவெக மற்றும் விஜய் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "விஜய்யை சூழ்ந்துள்ள டெல்லி மேகம் இப்போதைக்கு விலக வாய்ப்பில்லை" என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
-
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் போன விஜய்.. பொன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு! -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள் -
Vijay: அரசியல் சூதாடி யார்? விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்! பொன்ராஜ் பதிலடி! -
தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் திடீர் ரத்து.. தேர்தல் ஆணைய அனுமதி கிடைக்காததால் ஒத்திவைப்பு! -
“விஜய் முதலில் மன்னிப்பு கேட்கணும்”.. பதில் சொல்ல வக்கு இல்லையா? பொன்ராஜ் கொடுத்த ரிப்ளை! -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ்












Click it and Unblock the Notifications