சென்னை வழிப்பறி திருட்டு கும்பல்.. ஆந்திராவில் அமாவாசை பூஜை.. விசாரணையில் திகில் தகவல்
சென்னை: சென்னையில் வழிப்பறி செய்யும் திருட்டு கும்பல், ஆந்திராவில் அமாவாசை பூஜை நடத்துவதுடன் அதில் தென்னிந்தியாவைச் சேர்ந்த சிறிய மற்றும் பெரிய திருடர்கள் பங்கேற்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னையில் ஏழுகிணறு வண்ணாரப்பேட்டை, கொருக்குபேட்டைஉள்பட வட சென்னை பகுதிகளில் அண்மைக் காலமாக அதிகாலை நேரங்களில் பெண்களிடம் செல்போன் மற்றும் பணத்தை பறிக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது.
இதனிடையே ஏழு கிணறு பகுதியில் அதிகாலை நேரத்தில் 4 பேரின் செல்போன் பறிக்கப்பட்டது தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

கொள்ளையர்கள் சிக்கினர்
நேற்று திருவெற்றியூர் ரயில் நிலையத்தில் கொள்ளையடிக்க முயன்ற திருவெற்றியூரைச் சேர்ந்த அரவிந்தன், புளியந்தோப்பு ஓசை மணி ஆகிய 2 கொள்ளையர்களை ஏழு கிணறு தனிப்படை போலீசார் துரத்தி பிடித்தனர்.

பெண்களிடம் கொள்ளை
அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் தான் அதிகாலை நேரங்களில் மது அருந்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் சென்று தனியாக இருக்கும் பெண்களை நோட்டமிட்டு,செல்போன் அல்லது பணப்பைகளை பறிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தது தெரியவந்தது.

ஐந்து இடங்களில் கொள்ளை
இந்த கொள்ளையர்கள் ஒரு நாளில் 4 அல்லது ஐந்து இடங்களில் வழிபறி செய்துவிட்டு ஆந்திராவுக்கு தப்பி ஓடுவதையும் வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்கள்.

தொடர்பில் கொள்ளையர்கள்
சென்னையில் வழிப்பறி செய்யும் திருடர்கள் ஆந்திராவின் நெல்லூர் மாவட்டம் கசந்தர் என்ற இடத்தில் ஒவ்வொரு அமாவாசையின் போதும் பூஜை நடத்துகிறார்கள். இந்த பூஜையில் தென்னிந்தியாவைச் சேர்ந்த பெரிய சிறிய திருடர்கள் பங்கேற்பதும், அனைத்து திருடர்களும் தொடர்பில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து கைது செய்யப்பட்ட இரண்டு பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையருக்கு பரிந்துரை அனுப்பி உள்ளனர்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications