மீண்டும் "அந்த" ஆயுதங்களை கையில் எடுக்கும் சென்னை மாநகராட்சி.. கொரோனாவை ஒழிக்க முழுவீச்சில் பணிகள்
சென்னை: சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா கட்டுப்பாட்டு மையங்களையும் கான்டாக்ட் டிரேசிங் குழுக்களையும் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் நோய் பரவும் விகிதம் குறையும். மேலும் கொரோனா நோய் உறுதியானவர்களுடன் யார் யார் நெருங்கிய தொடர்பில் இருந்தார்கள் என்பதையும் கண்டறிய முடியும்.
தமிழகத்தில் கொரோனாவின் 2ஆவது அலை மிகவும் வீரியமாக உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

மாநகராட்சி
இதனை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் சுகாதாரத் துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து ஆலோசனைகளை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் சென்னை மாநகராட்சி அமைந்துள்ள ரிப்பன் கட்டடத்தில் நோய் கட்டுப்பாட்டு மையங்களையும் கான்டாக்ட் டிரேசிங் குழுக்களையும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நோய் தொற்று
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில் கட்டுப்பாட்டு அறைகளை ஏற்கெனவே தொடங்கிவிட்டோம். கொரோனா உறுதியாகும் நபர்களுக்கு எங்கிருந்து நோய் தொற்று வந்தது என்பதை கண்டறிய முயற்சிப்போம். கான்டாக்ட் டிரேசிங் முறையால் மட்டுமே நோய் தொற்று அதிகரிப்பதை தடுக்க முடியும்.

கான்டாக்ட் டிரேசிங்
அது போல் கொரோனா அறிகுறிகள் இருப்பவர்கள், கொரோனா பாதிப்பில் உள்ளவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டால் தொற்று பரவும் விகிதம் குறையும். கடந்த ஆண்டு கொரோனா உச்சத்தில் இருந்த போது 200-க்கும் மேற்பட்டவர்கள் கான்டாக்ட் டிரேசிங்கில் ஈடுபட்டிருந்தார்கள்.

கான்டாக்ட் டிரேசிங்
இந்த ஆண்டு ஜனவரி மாதம் கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை குறைய தொடங்கியவுடன் கான்டாக்ட் டிரேசிங்கில் வெறும் 10 பேர் மட்டுமே இருந்தனர். தற்போது கான்டாக்ட் டிரேசிங், கட்டுப்பாட்டு அறைகள் ஆகியவற்றை நாங்கள் மீண்டும் கொண்டு வருவோம். பயிற்சி பெற்ற சானிட்டரி இன்ஸ்பெக்டர்களை கொண்டு கான்டாக்ட் டிரேசிங் செய்யப்படும் என்றனர்.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications