மகனுக்கு கிடைக்காத சாதி சான்றிதழ்.. தீக்குளித்து உயிர்விட்ட நரிக்குறவர் தந்தை! விசாரிக்கும் ஐகோர்ட்
சென்னை: தனது மகனுக்கு சாதி சான்றிதழ் தர அதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததாக கூறி உயர்நீதிமன்றம் அருகே நரிக்குறவர் தீக்குளித்து இறந்த நிலையில், அந்த வழக்கை உயர்நீதிமன்றம் தாமாக விசாரிக்க முன்வந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த இவர் தனது மகனுக்கு சாதி சான்றிதழ் கோரி விண்ணப்பித்து இருக்கிறார். ஆனால் அவருக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த வேல்முருகன் தனது மகனுக்கு சாதி சான்றிதழ் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றம் அருகே வடக்கு கோட்டை சாலையில் அமைந்து இருக்கும் மாற்றுமுறை குறைதீர் மன்ற கட்டிடம் அருகே தீக்குளித்தார்.
அவரை மீட்ட போலீசார் தீக்காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில், இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் முடிவு செய்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications