உலக கோப்பை வீரர்களுக்கு மேடையில் இடம் இல்லை! முன்னாள் வீரர் ஆதங்கம்! உறுதி தந்த அமைச்சர் உதயநிதி!
சென்னை : உலக கோப்பை ஹாக்கி காட்சி போட்டி மேடையில் முன்னாள் இந்திய அணி வீரர்களுக்கு இடம் அளிக்காததால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், மேடையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன் உரையின் போது, முன்னாள் வீரர்களுக்கு மதிப்பளிக்கப்படும் இனி இதுபோன்ற சம்பவம் நடைபெறாது என தெரிவித்தார்.
2023 ஆண்டு ஹாக்கி உலகக் கோப்பை தொடரை இந்தியா நடத்துகிறது. அடுத்த மாதம் ஜனவரி 13 முதல் 29 ஆம் தேதி வரை ஒடிசா மாநிலத்தில் ஹாக்கி உலக கோப்பை போட்டி நடைபெற உள்ளது. இதையொட்டி, ஹாக்கி கோப்பையை நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மும்பையில் இருந்து விமானம் மூலம் ஹாக்கி கோப்பை இன்று காலை சென்னை கொண்டுவரப்பட்டது. விமான நிலையத்தில் ஹாக்கி கோப்பையை தமிழ்நாடு ஹாக்கி சங்கத் தலைவர் ஜான் மனோகரன் பெற்று கொண்டார்.

உலக கோப்பை ஹாக்கி
தொடர்ந்து ஹாக்கி விளையாட்டு வீரர்கள் கோப்பையுடன் வாகனத்தில் தலைமைச் செயலகத்திற்கு சென்றனர். இன்று காலை உலக கோப்பை முதல்வரிடம் வழங்கப்பட்ட நிலையில் ,மாலை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் உலக கோப்பை பொதுமக்கள் பார்க்கும் வகையிலும் முன்னாள் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஏற்பாடு செய்யபட்டு இருந்தது.

முன்னாள் வீரர்கள்
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த 1975ஆம் ஆண்டு உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்று இருந்த தமிழக வீரர்கள் கோவிந்தா, வி.ஜே.பிலிப்ஸ், கிளாடியஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். ஆனால் அவர்களுக்கு மேடையில் இடம் ஒதுக்கப்படவில்லை. இதனையடுத்து முன்னாள் வீரர்களுக்கு மேடையில் இடம் இல்லாததை பார்த்த முன்னாள் ஹாக்கி வீரர் பாஸ்கரன் அங்கிருந்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரிகளிடம் இதுகுறித்து பதில் அளிக்குமாறும் மூத்த வீரர்களுக்கு இடம் வழங்க வேண்டும் என கூறினார்.

அமைச்சர் உதயநிதி
ஆனால் அதிகாரிகள் உரிய பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இறுதி வரை பதில் கிடைக்காத நேரத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் புகார் அளித்தார் பின்னர் அவர்களுக்கு மேடையில் இடம் வழங்கப்பட்டது. இதனையடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உலக கோப்பையை வென்ற முன்னாள் வீரர்களுக்கு உடனடியாக மேடையில் இடம் வழங்க வேண்டுமென அதிகாரிகளிடம் கூறினார். இதனையடுத்து முன்னாள் வீரர்களுக்கு மேடையில் இடம் அளிக்கப்பட்டது.

மேடையில் இடம்
பின்னர் தானாக மேடையில் பேச வேண்டும் என கூறி பேசிய முன்னாள் ஹாக்கி வீரர் வி.ஜே.பிலிப்ஸ்," எங்கள் குடும்பத்தில் 3 நபர்கள் உலக கோப்பை மற்றும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று உள்ளோம் எழும்பூர் மைதானம் மண்ணாக இருந்த காலம் முதல் விளையாடி வருகிறோம் ஆனால் எங்களுக்கான மரியாதை இங்கு வழங்கப்படாமல் இருந்தது மிகவும் கவலை அளிப்பதாகவும் இனி இதுபோன்ற நிகழ்ச்சி நடைபெறாமல் இருக்க அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். பின்னர் மேடையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன் உரையின் இறுதியாக இனி இதுபோன்ற சம்பவம் நடைபெறாது என தெரிவித்தார். முன்னாள் வீரர்கள் அதிருப்தியால் விழாவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications