"ரூ.500 வாங்கிட்டு என்னை அனுப்புங்க.." நடு ரோட்டில்.. போலீசிடம் அலப்பறை செய்த சட்டக்கல்லூரி மாணவன்!
சென்னை: குடிபோதையில் பைக் ஓட்டி வந்த சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர்.. 500 ரூபாய் வாங்கிக்கொண்டு என்னை அனுப்புங்கள் என போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னை தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் உள்ள வள்ளுவர் குருகுலம் பள்ளி அருகே நேற்று இரவு உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
Recommended Video
அப்போது சந்தேகத்தின் பேரில் ஒரு இரு சக்கர வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர்.

சட்டக் கல்லூரி மாணவர்
அந்த வாகனத்தை ஓட்டி வந்த நபர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் கீழ்கட்டளை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் ஸ்டாலின் என்பது தெரியவந்தது. இதையடுத்து குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக தாம்பரம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

வக்கீல் விட்டுருங்க
இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தான்.. வழக்கறிஞர் என்னை விட்டு விடுங்கள் என்று சத்தம் போட்டார். உங்களிடம் கெஞ்சிகிட்டே இருக்கிறேன். என்னை விடாமல் பிடித்து வைக்கிறீர்கள் என போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வீடியோவை யூட்யூப்ல போடுங்க சார்
போலீஸார் வீடியோ எடுப்பதை பார்த்ததும்.. "யூடியூப்ல போடுங்க சார்.. 2 மணி நேரம் போராடியிருக்கேன்.." என்று வாய் குளறியபடி பேசுகிறார் அந்த மாணவர். அதற்கு போலீசார், ஏன் தண்ணியடிச்சிட்டு வந்தே.. நாங்களா உன்னை 2 மணி நேரமா நிற்க சொன்னோம். வழக்கு போட்டதும் உங்களை கிளம்ப சொல்லிவிட்டோமே என்று பதிலுக்கு கேட்கிறார்கள்.

காலில் விழுந்தேன் விடவில்லை
ஆனால், வீடியோ எடுப்பதை தனக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்த அந்த இளைஞர், போலீசாரை மாட்டி விடும் வகையில், பேச ஆரம்பிக்கிறார். "சார்.. நான் உங்கள் காலில் எல்லாம் விழுந்தேன்.. 2 மணி நேரமா நீங்க விடலை சார்.." என்று வீடியோ கேமராவை பார்த்தபடி பேசுகிறார் அந்த மாணவர். பதிலுக்கு போலீசார்.. நாங்க யாராவது உங்களை காலில் விழச் சொன்னோமா.. நீங்களாக காலில் விழுந்துவிட்டு இப்படி பேசுகிறீர்களே என்று கேட்கிறார்கள்.

500 வாங்கிட்டு அனுப்புங்க
அடுத்ததாக அந்த வாலிபர் வீசியது பெரிய குண்டு. ஆம்.. ஊரடங்கு காலத்தில் இதேபோல் குடிபோதையில் மாட்டிக்கொண்டேன் அப்போது 500 ரூபாய் வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தீர்கள் இப்போதும் அதே போல் என்னை அனுப்புங்க.. என்று பகீர் குற்றச்சாட்டை தூக்கிப் போட்டார் இளைஞர். வீடியோ எடுத்த போலீஸ்காரரே ஆடிப்போய்விட்டார். நம்மை வம்பில் மாட்டிவிடத்தான் வீடியோ எடுப்பதை பார்த்து இந்த வாலிபர் இப்படி பேசுகிறார் என்பதை புரிந்து கொண்டார். உடனே, உங்களிடம் 500 வாங்கியது யார், அவர் பெயர் என்ன என சரமாரியாக கேள்வி எழுப்பினார். ஆனால் இளைஞர் உளறிக் கொண்டே இருந்தார், தகவல் சொல்லவில்லை.

மன்னிப்பு கேட்ட உறவினர்கள்
இதனிடையே தகவல் அறிந்து, அந்த இளைஞரின் உறவினர்கள் வந்து போலீசாரிடம் மன்னிப்பு கேட்டு அவரை அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் சுமார் இரண்டு மணி நேரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரோட்டில் சென்ற பிற வாகன ஓட்டிகள் இதை வேடிக்கை பார்த்தபடி சென்றனர். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகியுள்ளது
-
“பாட்டிலுக்கு 10 ரூபாய்”: பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால்- ஐகோர்ட் வார்னிங் -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு












Click it and Unblock the Notifications