நெக்ஸ்ட் 3 மணிநேரம் ரொம்ப முக்கியம்.. சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை..19 மாவட்டங்களுக்கு அலர்ட்
சென்னை: சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு மழை பெய்த நிலையில் இன்று காலை முதல் தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்குகிறது. இந்நிலையில் தான் தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரம் ரொம்ப முக்கியம் எனக்கூறி சென்னை உள்பட 19 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அக்டோபர் மாத இறுதியில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை துவங்கியது. முதல் 2 வாரம் இந்த பருவமழை சென்னை உள்பட பல மாவட்டங்களில் கொட்டித்தீர்த்தது.
அதன்பிறகு மாண்டஸ் புயலால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை பெய்தன. அதன்பிறகு மழை என்பது சற்று குறைந்து இருந்தது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்
இந்நிலையில் தான் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு 11.30 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 330 கிலோமீட்டர் கிழக்கு-தென்கிழக்கில் நிலை கொண்டிருந்தது. இது சற்று வலு குறைந்து மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலையில் இலங்கை கடலோரப்பகுதியின் அருகில் நிலவக்கூடும். அதன்பிறகு மேலும் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை வழியாக குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நாளை காலை நிலவக்கூடும்.

மழை வாய்ப்புள்ள மாவட்டங்கள்
இதனால் தமிழ்நாட்டில் டெல்டா, தென்மாவட்டங்கள் என மொத்தம் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியது. அதன்படி தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் காலை முதல் கனமழை
இதுதவிர தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இந்நிலையில் தான் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. அதன்பிறகு சற்று ஓய்வெடுத்த கனமழை இன்று காலை முதல் மீண்டும் துவங்கி பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தமட்டில் திருவல்லிக்கேணி, எழும்பூர், பட்டினப்பாக்கம், மெரினா, ஆழ்வார்பேட்டை உள்பட பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

அடுத்த 3 மணிநேரம் முக்கியம்
இந்நிலையில் தான் அடுத்த 3 மணிநேரத்தில் தமிழகத்தின் 19 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், புதுக்கோட்டை, கோவை, திருநெல்வேலி மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் கனமழை பெய்ய உள்ளது.
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே












Click it and Unblock the Notifications