Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் வீட்டு ஓனர்களுக்கு.. காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னையில் சொந்த வீடு வைத்துள்ளவர்கள் தங்கள் வீடுகளில் வசிக்கும் வாடகைதாரர்களின் விவரத்தை அக்டோபர் 26-ம் தேதிக்குள் தாங்கள் வசிக்கும் எல்லைக்குள் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பொதுவாக உள்ள உத்தரவு தான் இது. வீட்டு உரிமையாளர்கள், தங்களது வீட்டை வாடகைக்கு விட்ட, 15 நாட்களுக்குள் அருகில் உள்ள காவல் நிலையங்களில், வாடகை தாரர்களின் பெயர், ஒரு புகைப்படம், அவர்களது நிரந்தர முகவரி, ஏற்கனவே வசித்த முகவரி போன்ற விவரங்களை இதற்காக உள்ள விண்ணப்ப மனுக்களில் எழுதி, காவல் நிலையங்களில் அளிக்க வேண்டும்.

வீட்டு உரிமையாளர்கள், வாடகை தாரர்களோடு போடும் ஒப்பந்தம் பற்றி எதுவும் போலீசுக்கு தெரிவிக்க தேவையில்லை . வாடகை தாரர்கள் பற்றிய தகவல்கள் காவல் நிலையங்களில் ரகசியமாக வைக்கப்படும்.

வெளிமாநிலத்தவர்

வெளிமாநிலத்தவர்

இந்த விவரங்கள் காவல் நிலையங்களில் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். அந்தந்த பகுதி துணை கமிஷனர்கள் அலுவலகங்களிலும், கமிஷனர் அலுவலகத்தில் உளவுப்பிரிவிலோ அல்லது குற்ற ஆவண காப்பகத்திலோ இந்த விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைப்பார்கள். வெளிமாநிலங்களிலோ அல்லது வெளிநாடுகளில் இருந்து வாடகைக்கு வருபவர்களும் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.

பாதுகாப்பு நடவடிக்கை

பாதுகாப்பு நடவடிக்கை

பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில், வீட்டு உரிமையாளர்கள், தங்களது வீட்டில் வாடகைக்கு குடியிருப்போரின் விவரங்களை காவல் நிலையங்களில் தெரியப்படுத்த வேண்டும் என்ற உத்தரவின்படி தான் சென்னை மாநகராட்சி காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தற்போது மீண்டும் உத்தரவிட்டுள்ளார்.

அக்டோபர் 26ம் தேதி

அக்டோபர் 26ம் தேதி

இதன்படி சென்னையில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீட்டில் வாடகைக்கு வசிப்போரின் விவரங்களை வரும் அக்டோபர் 26-ம்தேதிக்குள் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    என்ன ஆட்டம்? Mask போட சொன்ன போலீஸாரை கடுப்பேற்றிய பெண் | Ennane Solringa?
    தப்பிக்க முடியாது

    தப்பிக்க முடியாது

    வெளிமாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் இருந்து அல்லது குற்றச்செயல்களில் தொடர்புடையவர்கள் தப்பி வந்து வேறு பகுதிகளில் வசிக்கிறார்கள். அப்படி வசிப்பவர்களை கண்டுபிடிப்பதற்காகவும், முன்பின் தெரியாதவர்களால் ஏற்படும் குற்றச்செயல்களை தடுப்பதற்காகவும் காவல்துறை இந்த தகவலை மக்களிடம் கேட்கிறது. ஏனெனில் ஏதேனும் குற்றச்செயலை செய்துவிட்டு தப்பிவிட்டால் அவரை பிடிக்க , ஆதார் முகவரி உள்ளிட்டவை வசதியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+