சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா 4 மாதங்களுக்கு பிறகு இன்று திறக்கப்படுகிறது..!
வண்டலூர் பூங்கா இன்று முதல் திறக்கப்படுகிறது
சென்னை: கிட்டத்தட்ட 4 மாதங்களுக்குப் பிறகு வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறக்கப்படுகிறது... அதன்படி, இன்று முதல் பார்வையாளர்கள் பூங்காவை சுற்றிப்பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை பரவல் 4 மாத காலமாகவே அதிகமாக இருந்தது.. இதனால் உயிரிழப்புகளும் நிறைய ஏற்பட்டன.. தொற்று பாதிப்பும் அதிக அளவுக்கு ஏற்பட்டன.
இதில் சென்னை மாவட்டம் பீதியை கிளப்பிவிட்டது.. எனவே உடனடியாக லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது... ஏராளமான தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன..

பூங்கா
பிறகு தொற்று மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்ததையடுத்து, தளர்வுகளும் ஒவ்வொன்றாக வெளி வந்தன. அப்படித்தான், கடந்த ஏப்ரல் 20-ம் தேதி வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்கா மூடப்பட்டது. ஏற்கனவே வண்டலூர் உயிரியல் பூங்காவில் 2 சிங்கங்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்தது.. மேலும் 7 சிங்கங்கள் பாதிக்கப்பட்டு தொற்றில் இருந்து மீண்டு வந்தது...

அதிகாரிகள்
இதனால் பூங்காவை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்தது.. கடந்த சில தினங்களாக தொற்று குறைந்துள்ளதால் உயிரியல் பூங்காக்களை திறப்பதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது... இதையடுத்து, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாஹூ உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அறிவுறுத்தல்
பிறகு, பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள், பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது... அதுமட்டுமல்லாமல், விலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வலியுறுத்தினர்... இதை தொடர்ந்து, வண்டலூர் உயிரியல் பூங்காவில் இன்று முதல் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

திறப்பு
எனினும், பூங்காவுக்கு வரும் பொதுமக்கள், மாஸ்க் அணிவதுடன், 2 மீட்டர் தூரம் சோஷியல் டிஸ்டன்ஸ் கடைப்பிடிப்பதை உறுதி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது... வண்டலூர் உயிரியல் பூங்கா தவிர, சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, வேலூர் அமிர்தி பூங்கா என மாநிலத்தில் உள்ள அனைத்து உயிரியல் பூங்காக்களும் இன்று முதல் திறக்கப்படுகின்றன.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications