முதல்வர் ஸ்டாலின் ஒரு முயற்சி எடுத்தால்.. அண்ணாமலை வேறு முயற்சி.. பாராட்ட வேண்டிய மாற்றங்கள்
சென்னை: சிவகாசி பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வில் ஒளி பெற வேண்டும் எனில் பட்டாசுகளை விற்க விதிக்கப்பட்ட தடையை பல மாநிலங்கள் திரும்ப பெற வேண்டும். அதற்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் மூலம் முயற்சி எடுத்தார் அதே பாணியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் முயற்சி எடுத்துள்ளார். ஆரோக்கியமான இந்த போட்டியை பலர் பாராட்டி வருகிறார்கள்.
தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில் பட்டாசுகளை விற்க விதிக்கப்பட்ட தடையை பல்வேறு மாநிலங்கள் விலக்கினால் தான் சிவகாசி பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வில் ஒளி பிறக்கும். இதற்கு தமிழக அரசும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது,.
இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், "பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்தத்தடையை மறுபரிசீலனை செய்திடுவீர்!" டெல்லி - ஒரிசா - ராஜஸ்தான் மற்றும் அரியானா ஆகிய 4 மாநில முதல்வருக்குக் கடிதம் எழுதினார்.

தடை நீக்கம்
முதல்வர் ஸ்டாலினின் இந்த வேண்டுகோளை ஏற்றும் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட், சிவகாசி பசுமைப் பட்டாசுகளை இராஜஸ்தான் மாநிலத்தில் வெடிப்பதற்கு இருந்த தடையைநீக்கி உத்தரவிட்டுள்ளார். இந்த செய்தி அறிந்து மகிழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் , நேற்று இரவு விடுத்த அறிக்கையில் , இராஜஸ்தான் முதலமைச்சருக்கு தமது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

பட்டாசு தொழில்
இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறும்போது, நான் எழுதிய கடிதத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, பட்டாசு விற்பனைக்கு ஒட்டுமொத்தமாக விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியதற்கு ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக்கெலாட் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்கள் வாழ்வாதாரத்திற்கு இப்பட்டாசுத் தொழிலையே நம்பியிருக்கக்கூடிய இலட்சக் கணக்கான மக்களின் வாழ்க்கையில் உங்கள் கனிவுமிகு நடவடிக்கை ஒளியேற்றும்" என்று கூறியிருந்தார்.

கடிதம் எழுதினார்
இந்நிலையில் திமுக அரசு இப்படி ஒரு முயற்சியை மேற்கொண்ட மறுநாளே பாஜகவும் தன்பங்கிற்கு சிவகாசி பட்டாசு தொழிலாளர்களுக்கு செயலில் இறங்கி உள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க அனுமதி தர வேண்டும் என அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார். பட்டாசு வெடிக்க அனுமதி அளிப்பதன் மூலம் தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உற்பத்தியாளர்கள் வாழ்வில் தீபஒளி ஏற்ற வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பாராட்டு
தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில் பட்டாசுகளை விற்க விதிக்கப்பட்ட தடையை பல்வேறு மாநிலங்கள் விலக்கினால் தான் சிவகாசி பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வில் வெளிச்சம் பிறக்கும் என்ற சூழலில், பசுமை பட்டாசுகளை விற்க அனைத்து மாநிலங்களும் அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அதுவும் மாநிலத்தை ஆளும் திமுகவில் இருந்தும், மத்தியில் ஆளும் பாஜகவில் இருந்தும் இதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருப்பது பாராட்ட வேண்டிய மாற்றங்கள் ஆகும்
-
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications