Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துரோக வரலாறு! எடப்பாடியின் துரோகங்கள் எல்லோருக்கும் தெரியும்! வெளுத்து வாங்கிய முதல்வர் ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : எடப்பாடி பழனிசாமியின் துரோகங்களை அவரது அரசியலை அறிந்தவர்கள் அறிவார்கள் எனவும், எடப்பாடி பழனிசாமியின் துரோகத்துக்குதான் தமிழக மக்கள் தேர்தலில் தண்டனை கொடுத்தனர் என தமிழக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழக சட்டசபை மழைக்காலத் கூட்டத் தொடர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கி நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், பல்வேறு கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

நேற்றைய சட்டசபை கூட்டத்தில் ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு

இந்நிலையில் இன்று தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தமிழக சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். முதல்வர் முன்மொழிந்த தனித்தீர்மானம் மீது பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பேசினர். பட்டதாரி இளைஞர்களை திட்டமிட்டு சுட்டுக் கொன்றுள்ளனர்; சுடலைக்கண்ணன் என்ற காவலரை கொண்டு நவீன துப்பாக்கியை பயன்படுத்தி மோசமான படுகொலையை நடத்தியுள்ளனர் எனவும், எடப்பாடி பழனிசாமி உள்பட தவறு செய்த அனைவர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தவாக சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் கோரிக்கை விடுத்தார்.

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

தொடர்ந்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அறிக்கை விவாதம் மீது பேசிய ம.ம.க. எம்எல்ஏ ஜவாஹிருல்லா , "கடமையில் இருந்து தவறிய எடப்பாடி பழனிசாமி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஆணையத்தின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். பின்னர் பதிலளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான திமுக அரசின் நடவடிக்கைகளை பட்டியலிட்டார்.

அருணா ஜெகதீசன் அறிக்கை

அருணா ஜெகதீசன் அறிக்கை

மேலும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடந்த போது முதல்வராக இருந்தவரும், தற்போதைய தமிழக எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். தொடர்ந்து பேசிய முதல்வர்,"திட்டமிட்டே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதை அருணா ஜெகதீசன் அறிக்கை உறுதி செய்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

முந்தைய அதிமுக ஆட்சியின் ஆணவத்துக்கு தூத்துக்குடி சம்பவம் எடுத்துக் காட்டு. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: டிவியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என எடப்பாடி பழனிசாமி சொன்னார். எடப்பாடி பழனிசாமியின் துரோகத்துக்குதான் தமிழக மக்கள் தேர்தலில் தண்டனை கொடுத்தனர். எடப்பாடி பழனிசாமியின் துரோகங்களை அவரது அரசியலை அறிந்தவர்கள் அறிவார்கள்" எனப் பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+