ஸ்கூல் நடத்தும் திட்டம் இருக்கா? அங்கீகாரம் பெறுவது இனி ரொம்ப ஈஸி! முதல்வர் துவங்கி வைத்த புதிய வசதி
சென்னை: தனியார் பள்ளிகளுக்கு இணைய வழியே அங்கீகாரம் வழங்கும் முறையை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் இனி பள்ளி ஆரம்பிக்கும் திட்டத்தில் இருப்போர் யாரையும் நேரில் சந்திக்க அலைய வேண்டியதில்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

இது தொடர்பான விவரம் வருமாறு;
தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் தனியார் பள்ளிகளை தொடங்குதல், தொடர் அங்கீகாரம் உள்ளிட்ட அரசின் பல்வேறு அனுமதிகளைப் பெறும் சேவைகளை இணையம் வாயிலாகப் பெறும் வகையில், இணைய முகப்பினையும் (Portal) அலுவலர்களுக்கான செயலியையும் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பள்ளிக்கல்வித் துறையின் https://tnschools.gov.in என்ற வலைதளத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தனியார் பள்ளிகளுக்கான இணைய முகப்பு வாயிலாக (https://tnschools.gov.in/dms/?lang=en) சுயநிதிப் பள்ளிகள் தொடங்க அனுமதி, ஆரம்ப அங்கீகாரம், தொடர் அங்கீகாரம், கூடுதல் வகுப்பு தொடங்க அனுமதி உள்ளிட்ட அங்கீகாரங்களை பெறலாம்,.
இதேபோல் வகுப்பில் கூடுதல் பிரிவுகள் / மேல்நிலை வகுப்பில் புதிய பாடப்பிரிவுகள் பள்ளி நிர்வாக மாற்றத்திற்கான அனுமதி போன்ற பல்வேறு சேவைகளையும் இணையம் வழியாக மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, பள்ளிகள் அரசின் உரிய அனுமதியை ஒளிவு மறைவற்ற வகையில் வெளிப்படையாகவும் விரைவாகவும் பெற இயலும். இதனால் சுமார் 15,000 சுயநிதிப் பள்ளிகள் பயன்பெறும்.
பள்ளிக்கல்வித்துறையில் முழுக்க முழுக்க வெளிப்படைத் தன்மையான நிர்வாகத்தை கொண்டு வந்திருப்பதன் மூலம் அமைச்சர் அன்பில் மகேஸ் மிஸ்டர் கிளீன் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications