அம்பேத்கர் சிலைக்கு மாலை போட்ட கையோடு, வெற்றிவேல் வீரவேல் என்று முழங்கிய காயத்திரி ரகுராம்! பரபரப்பு
சென்னை: சென்னை கோயம்பேட்டில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வில் பாஜகவினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. பாஜகவின் காயத்ரி ரகுராம் தலைமையிலானவர்கள் அம்பேத்கர் சிலை முன்பு ‛வெற்றிவேல்... வீரவேல்' என கோஷமிட்டனர்.
Recommended Video
நாடு முழுவதும் இன்று சட்டமேதை அம்பேத்கரின் பிறந்தாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அம்பேத்கரின் பிறந்தநாளை ‛சமத்துவநாள்' என திமுக அரசு கொண்டாடி வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சி தலைவர்கள் அம்பேத்கர் சிலை, போட்டோக்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். திமுக சார்பில் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்துவது மட்டுமின்றி சமத்துவ உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.

அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை
இந்நிலை்யில் சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் அம்பேத்கர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தி சமத்துவநாள் உறுதி மொழி ஏற்று கொண்டனர். இதேபோல் காங்கிரஸ், பாஜக, விடுதலை சிறுத்தைகள் உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் அம்பேத்கருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

பாஜக கோஷம்
சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பாஜக சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது. பாஜகவின் கலைப்பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் தலைமையில் பாஜகவினர் வந்தனர். அவர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது, ‛‛வெல்க வெல்க வெல்கவே... பாஜக வெல்கவே... பாரத் மாதாகீ... ஜே.. வெற்றிவேல் வீரவேல்... வீரவேல்... வெற்றி வேல்... வெற்றி... வெற்றி... வெற்றிவேல்.... வீர... வீர... வீரவேல் என அவர்கள் கோஷமிட்டனர்'' இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கல்வீச்சு- மண்டை உடைப்பு
இதற்கிடையே கொடி கட்டும் விவகாரத்தில் பாஜக, விடுதலை சிறுத்தை கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல்உருவானது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் கல்வீசி தாக்கி கொண்டனர். இதில் 3 பேரின் மண்டை உடைந்தது. பாஜக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் எதிரெதிர் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனால் பரப்பரப்பான சூழல் உருவானது.

முருகன், அ்ண்ணாமலை
இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசார் இருதரப்பிடமும் பேசியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து மத்திய அமைச்சர் எல் முருகன், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் அங்கு வந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சென்றனர். இந்த சம்பவம் கோயம்பேட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications