லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிக்காக உழைக்க வேண்டும்.. அதிமுக பொதுக்குழு தீர்மானம்
சென்னை: லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற அதிமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் களப்பணி ஆற்ற வேண்டும் என்று அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய அரசை வலியுறுத்தியும் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்று சென்னை வானகரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக கட்சியின் செயற்குழு கூட்டம் மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே போல 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெற உழைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்றைய அதிமுக கூட்டத்தின் முகப்பு தோரணங்கள் எல்லாம் பழைய பாராளுமன்ற கட்டடம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த கட்டட முகப்பு அலங்காரம் தான் தற்போது அரசியல் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது, பழைய பாராளுமன்ற கட்டடம் தற்போது புழக்கத்தில் இல்லை. ஆளும் பாஜக அரசு புதிய நாடாளுமன்ற கட்டடத்தை கட்டியது. அதில் தான் இறுதியாக குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்றது. ஏற்கனவே , தமிழகத்தில் பாஜக - அதிமுக கூட்டணி முறிந்து இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக தரப்பினரும் அதிகாரபூர்வமாக தெரிவித்து வருகின்றனர்.
இப்படியான சூழலில் பாஜக அரசு கட்டமைத்த புதிய நாடாளுமன்ற கட்டடத்தை தவிர்த்து பழைய நாடாளுமனற கட்டடத்தை முகப்பு தோரண படமாக வைத்து இருப்பது மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி முறிவு என்பதை தெளிவுபடுத்துகிறது போல உள்ளது. அதை உறுதி செய்யும் விதமாக அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெற பாடுபாட்டு உழைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வெள்ள சேதத்தை சரியாக கையாளாத திமுக அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதே போல எதிர்கட்சி தலைவர் இருக்கை விவகாரத்தில் சபாநாயகரை கண்டித்தும் அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications