வாக்களிக்க ஆர்வம் காட்டாத கொரோனா நோயாளிகள் - 100% வாக்குப்பதிவு இலக்கு எட்டலையே
தமிழக சட்டசபைத் தேர்தலில் வாக்களிக்க கொரோனா நோயாளிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டவில்லை. ஒரு சிலர் மட்டுமே பிபிஇ உடை அணிந்து வாக்களித்தனர்.
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. கொரோனா நோயாளிகள் அதிக அளவில் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை. சென்னையில் 17 பேர் மட்டுமே வாக்களிக்க விருப்பம் தெரிவித்த நிலையில் ஒரு சிலர் மட்டுமே ஆம்புலன்ஸ் மூலம் வந்து வாக்களித்தனர். கொரோனா பரவல் காரணமாக தேர்தல் ஆணையத்தால்100 சதவிகித வாக்குப்பதிவு என்ற இலக்கு எட்டப்படவில்லை.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணிக்கு முடிந்தது. காலை முதலே மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். கொரோனா நோயாளிகள் மாலை 6 மணிக்கு மேல் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தாலோ, கொரோனா தொற்று இருந்தாலோ, அல்லது நீங்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தாலோ தனியே வந்து மாலை 6.00 மணி முதல் 7.00 மணி முடிய உள்ள நேரத்தில், வாக்கு சாவடியில் கொடுக்கப்படும் கொரோனா கவச உடையை அணிந்து வாக்களிக்கலாம். என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.
சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 8,991 கொரோனா நோயாளிகளில் 17 பேர் மட்டுமே சட்டசபைத் தேர்தலில் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் மட்டும் 24ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 60% மருத்துவமனைகளிலும், கொரோனா மையங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
100 சதவிகித வாக்குப்பதிவு இலக்கை எட்டும் வகையில் கொரோனா சிகிச்சை பெறுவோரும் வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் வழிவகை செய்தது. இதனால் தேர்தல் முடியும் கடைசி ஒருமணிநேரத்தில் 6 மணிமுதல் 7 மணிவரை கொரோனா நோயாளிகள் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. எனினும் ஒரு சிலரைத்தவிர பெரும்பாலான நோயாளிகள் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை.7 மணியளவில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியாக நிறைவடைந்தது.
கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள திமுகவின் எம்.பி. கனிமொழி மருத்துவமனையிலிருந்து பிபிஇ உடை அணிந்து மயிலாப்பூர் வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கை பதிவு செய்தார். அப்போலோ மருத்துவமனையிலிருந்து நேரடியாக மயிலாப்பூர் வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கை செலுத்தினார் கனிமொழி எம்.பி இதே போல அம்பத்தூர் சட்டசபைத் தொகுதி திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேல், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் ஆகியோர் கொரோனா தடுப்பு உடையுடன் வந்து வாக்களித்தனர்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2 ஆம் தேதி அன்று எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு!












Click it and Unblock the Notifications