மாடுகளை கடத்திய வட மாநில கும்பல்.. துரத்திப் பிடித்த மக்கள்.. சிக்கிய ஒருவர்.. பரபர சம்பவம்
சென்னையில் மாடு திருட வந்த வடமாநில கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: எப்போது மர்மநபர்கள் மாடுகளை திருடி கொண்டு போய்விடுவார்களோ என்று பூந்தமல்லி மக்கள் எந்நேரமும் தங்களது மாட்டினை கண்காணித்து கொண்டே வருகின்றனர்.
பூந்தமல்லியை அடுத்த வரதராஜபுரம் பகுதி நேற்றிரவு சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்தது. மக்கள் நெரிசல் அதிகமாகவே இருந்தது. இவ்வளவு இருந்தும், எதையுமே கண்டுகொள்ளாத ஒரு கும்பல் மாடுகளை வேனில் ஏற்றிக் கொண்டிருந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள் விரைந்து சென்று, வேனில் மாடுகளை ஏற்றி கொண்டிருந்தவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த கும்பல் வேனுடன் தப்பி சென்றது. உடனே பொதுமக்களும் இன்னொரு வண்டியில் ஏறி பின்னாலேயே துரத்தி சென்றார்கள்.

ஒருவர் சிக்கினார்
பூந்தமல்லி ரோட்டில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு விரட்டி துரத்தி சென்று வேனை மடக்கி விட்டார்கள். அந்த வேனுக்குள் 7 பேர் இருந்தார்கள். அவர்களுடன் ஒரு மாடும் இருந்தது. மக்களை கண்டதும் ஆளுக்கு ஒரு பக்கம் ஓடினார்கள். ஆனால் ஒருவர் மட்டும் வசமாக மாட்டி கொண்டார்.

ரத்தம் வழிந்தது
அவரை நடுரோட்டிலேயே வெளுத்த மக்கள், போலீசில் ஒப்படைத்தனர். ஆனால் அந்த நபருக்கு பொதுமக்கள் அடித்ததில் உடம்பெல்லாம் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. அதனால் போலீசார் அவரை கைது செய்து, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றார்கள். பிறகு விசாரணையை அவரிடம் ஆரம்பித்தனர்.

வாயே திறக்கவில்லை
எந்த கேள்விக்குமே பிடிபட்ட அந்த நபர் பதிலே சொல்லவில்லை. இன்னும் சொல்ல போனால் வாயே திறக்கவில்லை. உடனே போலீசார் அவரது சட்டைக்குள் கைவிட்டு ஏதாவது விவரம் இருக்கிறதா என்று பார்த்தனர். அப்போது ஆதார் அட்டை கிடைத்தது. அதில் அந்நபரின் பெயர் தாரிக் என்றும், மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. தமிழகம் வந்து மாட்டை கடத்தி போக இந்த வடமாநில கும்பல் வந்திருக்கிறது என தெரியவந்தது.

வேன், மாடு பறிமுதல்
இதையடுத்து கொள்ளையர்களின் வேன், மற்றும் அதற்குள் இருந்த ஒரு மாட்டினை போலீசார் பறிமுதல் செய்தார்கள். எனவே மீண்டும் தங்கள் பகுதிக்குள் யாரேனும் வந்து மாட்டை திருடி கொண்டு போய்விடுவார்களோ என்று மக்கள் பதட்டம் நிறைந்த கண்காணிப்புடனே இருக்கிறார்கள்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications