"மேலே செல்கிறது.. ஒரே நாள்தான்".. டவ்-தே புயல் பற்றி வெதர்மேன் கணிப்பு.. தமிழகத்திற்கு குட் நியூஸ்
சென்னை: தென்கிழக்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள டவ்-தே புயல் காரணமாக தமிழகத்தில் மழை பெய்யுமா, மழை தீவிரம் அடையுமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம் அளித்துள்ளார்.
தென்கிழக்கு அரபிக் கடலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று புயலாக மாறியது. இதற்கு டவ்-தே புயல் என்று பெயர் வைக்கப்பட்டது. நாளை டவ்-தே புயல் அதி தீவிர புயலாக மாற உள்ளது.
இந்த டவ்-தே புயல் காரணமாக கடந்த 3 நாட்களாக கேரளாவில் தீவிரமாக மழை பெய்து வருகிறது. தமிழகத்திலும் மேற்கு தொடர்ச்சி மலை அருகே இருக்கும் பகுதிகளில் தீவிரமாக மழை பெய்து வருகிறது.
டவ்-தே புயல்.. நாளை மறுநாள் காலை குஜராத்தின் துவாரகை அருகே கரையை கடக்கிறது!
நாளை
இந்த புயல் 17ம் தேதி அதி தீவிர புயலாக அரபிக்கடலில் உருமாறும். அதி தீவிர புயலாக மாறி கரையை கடக்கும் போது இதன் வேகம் 160 கிமீ வரை கூட இருக்கும். இந்த புயல் காரணமாக 220 மிமீ வரை கடுமையான மழை பெய்யும். குஜராத் மேற்கு பகுதியில் இந்த புயல் கரையை கடக்க உள்ளது.
மோசம்
டவ்-தே புயல் காரணமாக கேரளா, தமிழ்நாடு, கோவா, கர்நாடக, குஜராத் , மகாராஷ்டிரா ஆகிய 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி இருந்தது. இந்த நிலையில் புயலின் திசை கொஞ்சம் லேசாக திரும்பி உள்ளது. அதாவது புயலின் பெரும் பகுதி நிலத்திற்கு அருகில் இல்லாமல் கடலின் பகுதியில் உள்ளது.
அருகில் வரவில்லை
நிலத்திற்கு அருகில் புயலின் பெரும் பகுதி இல்லாத காரணத்தால் கேரளா, மஹாராஷ்டிரா, தமிழ்நாடு, கோவா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் கொஞ்சம் தப்பித்துள்ளது. இது தொடர்பாக டிவிட் செய்துள்ள தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப், தற்போது பெரும்பாலான மேகங்கள் மேற்கு பகுதியில் உள்ளது. நிலப்பகுதி இருக்கும் கிழக்கு பகுதியில் பெரிதாக மேகங்கள் இல்லை.
மேகம்
இதனால் மகாராஷ்டிரா, கர்நாடகாவில் பெரிய மழை பெய்ய வாய்ப்பு இல்லை. இரண்டு மாநிலங்களிலும் ஒரு நாள் மட்டும் கனமழை பெய்யும். மேற்கு குஜராத் பகுதி மட்டும் கவனமாக இருக்க வேண்டும். அங்கு கனமழை மற்றும் பலத்த காற்று வீச வாய்ப்புகள் உள்ளன.
தமிழ்நாடு
இதனால் தமிழ்நாடு, கேரளாவில் மழையின் அளவு குறையும். புயல் மேலே சென்று கொண்டு இருப்பதால், மழையின் தீவிரம் தமிழகத்தில் குறையும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். கொரோனா காலத்தில் இந்த புயல் பெரிய சேதங்களை ஏற்படுத்துமா என்று அச்சம் இருந்த நிலையில் டவ்-தே புயல் காரணமாக தமிழகத்தில் பாதிப்பு பெரிய அளவில் இருக்காது என்று கணிக்கப்பட்டுள்ளது.