மோடியின் மன்கிபாத் நிகழ்ச்சி- தமிழை புறக்கணித்த பொதிகை டிவி- ஆங்கில மொழிபெயர்ப்புடன் ஒளிபரப்பியது
சென்னை: பிரதமர் மோடியின் மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியை தமிழகத்தில் செயல்படும் அரசு தொலைக்காட்சியான பொதிகை தமிழ் மொழிபெயர்ப்புடன் ஒளிபரப்பாமல் ஆங்கில மொழிபெயர்ப்புடன் ஒளிபரப்பியது கடும் விமர்சனங்களுக்குள்ளாகி இருக்கிறது.
மத்திய பாரதிய ஜனதா அரசில் தமிழ் மொழி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் தமிழகத்தில் இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டும் வருகிறது.

தமிழ் புறக்கணிப்பு
அண்மையில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை இந்திய மொழிகள் அனைத்திலும் மொழி பெயர்க்கப்பட்டது. அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம் என மொத்தம் 17 மொழிகளில் புதிய கல்வி கொள்கை மொழிபெயர்க்கப்பட்டது. ஆனால் இந்த புதிய கல்விக் கொள்கை தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்படவில்லை.

பாஜகவின் புறக்கணிப்பு
மத்திய பாஜக அரசின் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மைக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். தமிழகத்தில் நிகழ்ச்சிகளில் பேசும்போது மட்டும் தமிழ் மொழியை பற்றி உயர்வாக பேசுகின்றனர் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள். ஆனால் நடைமுறையில் தமிழ் மொழியை திட்டமிட்டே மத்திய பாஜக அரசு புறக்கணித்து வருகிறது.

மோடியின் மன்கிபாத்
இன்று பிரதமர் மோடியின் மன்கிபாத் வானொலி நிகழ்ச்சி ஒலிபரப்பானது. இந்தியாவின் இந்தி பேசாத மக்களும் கூட பிரதமர் மோடியின் இந்தி பேச்சை பொறுமையாக கேட்டு அதன் மொழிபெயர்ப்புக்காக காத்திருப்பது ஒவ்வொரு முறையும் நடந்து கொண்டிருக்கிறது. இந்தி பேசாத மக்கள் புரிந்து கொள்ள கூடிய ஆங்கிலத்தில் பிரதமர் ஏன் பேசுவதில்லை என்கிற கேள்வியும் கூட முன்வைக்கப்படுகிறது.

பொதிகையில் தமிழ் இல்லை
இன்றைய மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியை தூர்தர்ஷனின் மாநில தொலைக்காட்சிகள் அந்தந்த மாநில மொழிகளில் மொழிபெயர்த்து ஒளிபரப்பு செய்தன. ஆனால் தமிழத்தில் தூர்தர்ஷனின் பொதிகை தொலைக்காட்சி மட்டும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஒளிபரப்பியது. திட்டமிட்டே தமிழ் மொழிபெயர்ப்புடன் ஒளிபரப்பாத பொதிகை தொலைக்காட்சிக்கு கடும் கண்டங்கள் எழுந்துள்ளன.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications