மிட்நைட்டில்.. "அவரை" ரகசியமாக சந்தித்தாரா ஓபிஎஸ்.. பற்றவைத்த "புள்ளி".. நெருப்பாய் தகிக்கும் அதிமுக
மிட்நைட்டில் நீதிபதியை ஓபிஎஸ் சந்தித்ததாக எடப்பாடி ஆதரவாளர் குற்றம்சாட்டுகிறார்
சென்னை: அதிமுக உட்கட்சி பிரச்சனை, சட்டரீதியாக செல்ல ஆரம்பித்துள்ள நிலையில், புதுபுது புகார்கள் இரு தரப்பில் இருந்தும் வெடித்து கிளம்பி உள்ளன.
Recommended Video
அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை தீவிரமடைந்துள்ளது... ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமியை நியமிப்பதற்கான ஏற்பாடுகளில் அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், இதற்கு ஓபிஎஸ் தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.. மேலும், இரட்டை தலைமையே நீடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

எகிறி அடிக்கும் எடப்பாடி
இதனால் அதிமுக ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையில் இரண்டாக பிளவுபட்டு கிடக்கிறது.. இரு தரப்புமே கோர்ட்டை நாடி உள்ளனர்.. ஓபிஎஸ் இந்திய தேர்தல் ஆணையத்துக்கே புகாரை கொண்டு போய்விட்டார்.. இதனால், இந்த விவகாரம் எங்கு போய் முடியுமோ என்று தெரியவில்லை.. மற்றொரு பக்கம், இரு தரப்பு ஆதரவாளர்களும் ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுகளையும், புகார்களையும் தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை அதிமுக ஒன்றிய கழக ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

திருவாடானை
எடப்பாடி தலைமையில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற தீர்மானமும் இங்கு நிறைவேற்றப்பட்டன. இதற்கு பிறகு, அகில உலக எம்ஜிஆர் மன்றத்தின் இணைச்செயலாளர் கே.சி. ஆணிமுத்து செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது, ஓபிஎஸ் மீது சரமாரியான புகார்களை அள்ளி வீசினார்.. "எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் பொதுச்செயலாளர் ஆகவேண்டும் என்று பொதுக் குழுவில் உள்ள 98 சதவீதம் பேர் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள்... திருவாடானை தொகுதியிலும் எடப்பாடிக்குத் தான் ஆதரவு அதிகம் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

எடப்பாடி ஷாக்
ஓபிஎஸ்ஐ நாங்கள் வெறுக்கிறோம்.. இதற்கெல்லாம் காரணங்கள் இல்லாமல் இல்லை.. அவர் பின்னால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே இருக்கிறார்கள்... ஆனால் எடப்பாடி பழனிசாமியிடம் அப்படி இல்லை.. சாதி ரீதியாக இல்லாமல் கட்சியை சீராக கொண்டு போவார்... அதனால்தான் நாங்கள் ஓபிஎஸ்சை வெறுக்கிறோம்.. அதுமட்டுமல்ல.. ஜெயலலிதா இந்நேரம் உயிருடன் இருந்திருந்தால், துரைமுருகனுக்கு ஓபிஎஸ் சால்வை போடுவாரா? அப்படி போட்டு விட்டால் ஜெயலலிதா தான் சும்மா விட்டு வைப்பாரா?

நள்ளிரவு 3 மணி
ஓபிஎஸ்ஐ நம்பி அவருடன் யாரும் பயணிக்க முடியாது என்று சசிகலாவே சொல்கிறார்... ஆனால் சசிகலாவுடன் இணைந்து பயணிக்கவே ஓபிஎஸ் விரும்புகிறார்.. இவர் விரும்பினாலும், சசிகலா அதற்கு தயாராக இல்லையே.. அது ஏன்? பொதுக்குழுவில் ஒற்றை தீர்மானம் வந்து விடக்கூடாது என்பதற்காக, நள்ளிரவு 3 மணிக்கு நீதிபதியை சந்தித்து பேசியிருக்கிறார் ஓபிஎஸ்.. இப்போது டெல்லி பயணம் நீதிமன்றம் என்று அடுத்தடுத்து காய்களை நகர்த்தி வருகிறார்... இவர் கட்சி தலைமைக்கு பண்பு இல்லாதவர்... எடப்பாடி தான் சரியான நபர்" என்றார்.

ஷாக்
முன்னதாக, ஒட்டுமொத்த ஆதரவும் தனக்கு துணையாக இருக்கும் என்ற எடப்பாடி பழனிசாமி நம்பிக்கையில் இருந்தபோது, ஓபிஎஸ்ஸின் கோரிக்கையை கோர்ட் ஏற்று கொண்டுவிட்டது, எடப்பாடி பழனிசாமிக்கு சற்று ஷாக்தானாம்.. கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லையாம்.. ஏற்கனவே ஹைகோர்ட்டில், இதே விவகாரத்தினால், அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது... இப்போது என்ன செய்வதென்று தெரியாமல், எடப்பாடி பழனிசாமி தரப்பு சுப்ரீம்கோர்ட்டை நாடி செல்லும் நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
-
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி அறிவித்த எடப்பாடி! ஆனா 5 பவுன் நகை கடன் ரத்து இல்லையே! -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்!












Click it and Unblock the Notifications