மிட்நைட்டில்.. "அவரை" ரகசியமாக சந்தித்தாரா ஓபிஎஸ்.. பற்றவைத்த "புள்ளி".. நெருப்பாய் தகிக்கும் அதிமுக
மிட்நைட்டில் நீதிபதியை ஓபிஎஸ் சந்தித்ததாக எடப்பாடி ஆதரவாளர் குற்றம்சாட்டுகிறார்
சென்னை: அதிமுக உட்கட்சி பிரச்சனை, சட்டரீதியாக செல்ல ஆரம்பித்துள்ள நிலையில், புதுபுது புகார்கள் இரு தரப்பில் இருந்தும் வெடித்து கிளம்பி உள்ளன.
Recommended Video
அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை தீவிரமடைந்துள்ளது... ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமியை நியமிப்பதற்கான ஏற்பாடுகளில் அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், இதற்கு ஓபிஎஸ் தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.. மேலும், இரட்டை தலைமையே நீடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

எகிறி அடிக்கும் எடப்பாடி
இதனால் அதிமுக ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையில் இரண்டாக பிளவுபட்டு கிடக்கிறது.. இரு தரப்புமே கோர்ட்டை நாடி உள்ளனர்.. ஓபிஎஸ் இந்திய தேர்தல் ஆணையத்துக்கே புகாரை கொண்டு போய்விட்டார்.. இதனால், இந்த விவகாரம் எங்கு போய் முடியுமோ என்று தெரியவில்லை.. மற்றொரு பக்கம், இரு தரப்பு ஆதரவாளர்களும் ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுகளையும், புகார்களையும் தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை அதிமுக ஒன்றிய கழக ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

திருவாடானை
எடப்பாடி தலைமையில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற தீர்மானமும் இங்கு நிறைவேற்றப்பட்டன. இதற்கு பிறகு, அகில உலக எம்ஜிஆர் மன்றத்தின் இணைச்செயலாளர் கே.சி. ஆணிமுத்து செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது, ஓபிஎஸ் மீது சரமாரியான புகார்களை அள்ளி வீசினார்.. "எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் பொதுச்செயலாளர் ஆகவேண்டும் என்று பொதுக் குழுவில் உள்ள 98 சதவீதம் பேர் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள்... திருவாடானை தொகுதியிலும் எடப்பாடிக்குத் தான் ஆதரவு அதிகம் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

எடப்பாடி ஷாக்
ஓபிஎஸ்ஐ நாங்கள் வெறுக்கிறோம்.. இதற்கெல்லாம் காரணங்கள் இல்லாமல் இல்லை.. அவர் பின்னால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே இருக்கிறார்கள்... ஆனால் எடப்பாடி பழனிசாமியிடம் அப்படி இல்லை.. சாதி ரீதியாக இல்லாமல் கட்சியை சீராக கொண்டு போவார்... அதனால்தான் நாங்கள் ஓபிஎஸ்சை வெறுக்கிறோம்.. அதுமட்டுமல்ல.. ஜெயலலிதா இந்நேரம் உயிருடன் இருந்திருந்தால், துரைமுருகனுக்கு ஓபிஎஸ் சால்வை போடுவாரா? அப்படி போட்டு விட்டால் ஜெயலலிதா தான் சும்மா விட்டு வைப்பாரா?

நள்ளிரவு 3 மணி
ஓபிஎஸ்ஐ நம்பி அவருடன் யாரும் பயணிக்க முடியாது என்று சசிகலாவே சொல்கிறார்... ஆனால் சசிகலாவுடன் இணைந்து பயணிக்கவே ஓபிஎஸ் விரும்புகிறார்.. இவர் விரும்பினாலும், சசிகலா அதற்கு தயாராக இல்லையே.. அது ஏன்? பொதுக்குழுவில் ஒற்றை தீர்மானம் வந்து விடக்கூடாது என்பதற்காக, நள்ளிரவு 3 மணிக்கு நீதிபதியை சந்தித்து பேசியிருக்கிறார் ஓபிஎஸ்.. இப்போது டெல்லி பயணம் நீதிமன்றம் என்று அடுத்தடுத்து காய்களை நகர்த்தி வருகிறார்... இவர் கட்சி தலைமைக்கு பண்பு இல்லாதவர்... எடப்பாடி தான் சரியான நபர்" என்றார்.

ஷாக்
முன்னதாக, ஒட்டுமொத்த ஆதரவும் தனக்கு துணையாக இருக்கும் என்ற எடப்பாடி பழனிசாமி நம்பிக்கையில் இருந்தபோது, ஓபிஎஸ்ஸின் கோரிக்கையை கோர்ட் ஏற்று கொண்டுவிட்டது, எடப்பாடி பழனிசாமிக்கு சற்று ஷாக்தானாம்.. கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லையாம்.. ஏற்கனவே ஹைகோர்ட்டில், இதே விவகாரத்தினால், அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது... இப்போது என்ன செய்வதென்று தெரியாமல், எடப்பாடி பழனிசாமி தரப்பு சுப்ரீம்கோர்ட்டை நாடி செல்லும் நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications