கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்திப்போம்.. தேர்தலுக்காக ஸ்டாலின் அதிரடி பிளான்!
உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்திக்க போவதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்திக்க போவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். திமுக கூட்டணி குறித்தும், தேர்தல் திட்டங்கள் குறித்தும் இதில் ஆலோசனை நடத்தினார்கள். கூட்டத்திற்கு பின் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.
ஸ்டாலின் தனது பேட்டியில், இன்று மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற நாடளுமன்ற உறுப்பினர்கள், நாடளுமன்றத்திற்கு அமைக்கப்பட்டு இருக்கும் பொறுப்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர். பல விஷயங்கள் குறித்து இதில் பேசினோம்.

உள்ளாட்சி தேர்தல்
தேர்தலுக்காக பூத் கமிட்டி சரியாக அமைக்கப்பட்டு இருக்கிறதா என்று பேசினோம். இதற்காக 12 பேர் கொண்ட குழுவை அமைத்து உள்ளோம். 40 நாடாளுமன்ற தேர்தலுக்கு ஏற்கனவே பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதேபோல் திமுக சார்பில் 12,617 ஊராட்சிகளில் ஊராட்சி சபை கூட்டத்தை கூட்டி, அந்த கூட்டம் நடக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம்.

தேர்தல் முழக்கம்
இதற்காக ஜனவரி 3 முதல் கிராம சபை கூட்டங்களை நடத்தி மக்களை சந்திக்க உள்ளோம். கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்திக்க போகிறோம். இதற்காக புதிய முழக்கத்தை தேர்வு செய்துள்ளோம். மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனதை வெல்வோம் என்று முழுக்கத்தை உருவாக்கி உள்ளோம்.

பாஜக கூட்டணி
கிராமம் முழுக்க மக்களை சென்று சந்திக்க போகிறோம். பிரதமர் மோடி அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக செய்திகள் வருகிறது. அது கொள்கை கூட்டணியா, கொள்ளை கூட்டணியா என்று யோசிக்க வேண்டும். ஓபிஎஸ் - இபிஎஸ்ஸை இணைத்து வைத்ததே மோடிதான்.

இன்னொரு அணி
ராகுலை நான் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்ததில் தவறில்லை, திமுகவின் உணர்வை நான் வெளிப்படுத்தினேன். இதில் யாருக்கும் கோபம் இல்லை. மூன்றாவது அணி உருவானால் பார்த்துக் கொள்ளலாம், என்று கூறியுள்ளார்.
-
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்!












Click it and Unblock the Notifications