சொதப்பும் ஐ-பேக்... கொதிக்கும் திமுக... இதுவரை பிரசாந்த் கிஷோர் டீம் செய்தது என்ன..?
சென்னை: திமுகவுக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவன செயல்பாடுகள் மு.க.ஸ்டாலினுக்கு திருப்திகரமாக இல்லை.
ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு பணியாற்றிய டீமில் பாதிபேர் ஐ-பேக் நிறுவனத்தில் இருந்து வெளியேறிவிட்டதால், அனுபவமற்ற புதிய நபர்களை கொண்டு திணறி வருகிறார் பி.கே.
சமூக வலைதளங்களில் திமுக மீதான விமர்சனங்களுக்கு ஐ-பேக் குழுவில் இருந்து சரியான பதிலடி கொடுப்பதில்லை என்பது கட்சி சீனியர்களின் கருத்தாக உள்ளது.

தேர்தல் வியூகம்
தேர்தல் வியூகம் வகுப்பதில் ஸ்பெலிஸ்ட் என பெயரெடுத்த பிரசாந்த் கிஷோரை அறியாத தலைவர்களே இந்தியாவில் இருக்கமுடியாது. தங்கள் கட்சியின் ஆலோசகராகவும், தேர்தல் வியூக வகுப்பாளராகவும் கொண்டு வர இவரிடம் பல கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தினாலும் எந்த குதிரை ஜெயிக்குமோ அந்த குதிரையிலேயே பயணப்பட விரும்புபவர். தமிழகத்தில் இருந்து கூட மக்கள் நீதி மய்யம், அதிமுக சார்பில் கடந்தாண்டு இவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஐ-பேக் அலுவலகம்
ஆனால் அவரோ ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மூலம் திமுகவுக்கு தேர்தல் பணியாற்றும் ஒப்பந்தத்தை பெற்றார். இதையடுத்து சென்னை அண்ணாநகரில் ஐ-பேக் நிறுவனத்தின் அலுவலகத்தை திறந்த பிரசாந்த் கிஷோர், முதற்கட்டமாக திமுகவின் டேட்டா பேஸ் கலெக்ட் செய்யும் பணியை தொடங்கினார். இது திமுக தகவல்தொழில் நுட்ப அணிக்கும் ஐ-பேக் அலுவலகத்திற்கும் உரசலை உண்டாக்கியது. தனது பணியாளர்களை வைத்து தகவல்களை திரட்டாமல் நோகாமல் நுங்கு திங்க பார்க்கிறார் பிரசாந்த் கிஷோர் என அவர் மீது திமுக ஐ.டி.விங் குற்றஞ்சாட்டியது.

ஊரடங்கு அமல்
இதனிடையே கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து அண்ணா நகரில் திறக்கப்பட்ட ஐ-பேக் அலுவலகம் முடங்கியது. இருப்பினும் ஒன்றிணைவோம் வா, சாலையோரம் வசிப்போருக்கு உணவு கொடுக்கும் திட்டம் என சில பணிகளை முன்னெடுத்தது ஐ-பேக் நிறுவனம். கொரோனா தீவிரமாக பரவிய காலம் என்பதால் இது திமுக நிர்வாகிகளை குறிப்பாக அவர்களது குடும்பத்தினரை அச்சமூட்டியது.

திமுக நிர்வாகிகள்
இதையடுத்து ஜூம் கால் மீட்டிங் என்ற பெயரில் திமுக நிர்வாகிகள் செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து கொடுக்கும் பணியை கவனிக்கத் தொடங்கினர் ஐ-பேக் ஊழியர்கள். முன்னணி நிர்வாகிகளாக இருந்தால் மட்டுமே செய்தியாளர்கள் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். இதனால் அந்த முயற்சியும் பெரியளவில் ஒர்க் அவுட் ஆகவில்லை. களப்பணிகள் ஆயிரம் இருக்க பிரஸ்மீட் ஏற்பாடு செய்வதை ஏதோ பெரிய சாதனையாக கருதி வருகின்றனர் ஐ-பேக் ஊழியர்கள்.

திருப்தியில்லை
திமுக எதிர்பார்த்த வேகமும், விவேகமும் ஐ-பேக் குழுவில் இல்லாததால் சற்றே அதிருப்தியில் உள்ளார் மு.க.ஸ்டாலின். இதனிடையே பிரசாந்த் கிஷோர் தமிழக சட்டமன்றத் தேர்தலில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்த்த திமுகவுக்கு, அவர் தனது சொந்த மாநிலமான பீகார் தேர்தலில் கவனம் செலுத்தி வருவதும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
-
ரூ.8,000 கூப்பன்.. திமுகவிற்கு வார்னிங் கொடுத்த தமிழக தேர்தல் அதிகாரி -
தொகுதி மறுவரையறை.. திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை -
ரூ.5000 + ரூ.8000.. ஸ்டாலின் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்.. பெண்களை தேடி வரப்போகும் பணம்! -
ராகுல் காந்தி கடும் அதிருப்தி.. திமுக அழைத்தும் செவிசாய்க்காத காங்கிரஸ் மேலிடம்.. என்ன நடந்தது? -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
தொகுதி மறுவரையறை! சண்டை செய்யும் திமுக.. வேடிக்கை பார்க்கும் அதிமுக! என்னதான் பிரச்சனை? -
"திமுக தோற்கணும்னு ராகுல் காந்தியே ஆசைப்படுறாரு".. கொளுத்திப் போடும் அண்ணாமலை! -
அமுதா அக்காவுக்கு சிரிப்பு தங்கல.. நாதக வேட்பாளரை பூத்தூவி வரவேற்ற திமுகவினர்! இது கூட தெரியாதா? -
அமைச்சரவையில் இட ஒதுக்கீடு வேண்டும்.. தேர்தல் நேரத்தில் விசிக எம்.பி எழுப்பிய ‘மேஜர்’ கோரிக்கை! -
ஏமாற்றும் ராகுல்.. ஸ்டாலினுடன் கைகோர்க்கும் கெஜ்ரிவால்.. திமுகவுக்கு ஆதரவாக 2 நாள் பிரசாரம் -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து!












Click it and Unblock the Notifications