வனப் பணி தேர்வில் நாட்டிலேயே 10வது இடம் பிடித்த தமிழக மாணவி திவ்யா.. கனிமொழி எம்.பி. வாழ்த்து
சென்னை: ஐஎப்எஸ் (வனப்பணி) தேர்வு முடிவு நேற்றிரவு வெளியிடப்பட்டது. இந்திய அளவில் 89 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், 10வது இடம் பிடித்து அசத்தியுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த திவ்யா.
இவருக்கு திமுக எம்.பி. கனிமொழி ட்விட்டர் மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) இந்திய வனப் பணிக்கான 89 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. தொடர்ந்து முதல் நிலை, மெயின் தேர்வு, நேர்முக தேர்வு என மூன்று நிலைகளில் இந்த தேர்வு நடந்தது.
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்.. புனித் ராஜ்குமாரின் அன்பை கண்டு.. நெகிழ வைக்கும் வீடியோ.

வனப் பணி
இந்த நிலையில் நேர்முக தேர்வு நிறைவடைந்து யுபிஎஸ்சி தனது இணையதளத்தில் நேற்று இரவு, இறுதி தேர்வு முடிவை வெளியிடப்பட்டது. இதில், இந்தியா முழுவதும் 89 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், 6 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

6 பேர் தமிழ்நாடு
யுபிஎஸ்சி தனது இணையதளமான www.upsc.gov.inல் நேற்று இரவு வெளியிட்டது. இந்திய அளவில் 89 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 6 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். தேர்ச்சி பெற்ற 89 பேரில் 50 பேர் ஒரே ஒரு தனியார் ஐஏஎஸ் அகடாமி மாணவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, டெல்லி, பெங்களூர், திருவனந்தபுரம் மையங்களில் இவர்கள் படித்தவர்கள்.

முதலிடம் கேரளா
கேரளாவை சேர்ந்த சூரஜ் பென் என்ற மாணவர் அகில இந்திய அளவில் முதலாம் இடத்தையும், ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த வித்யாதரி என்ற மாணவி 2ம் இடத்தையும் பிடித்துள்ளார்.

தமிழக மாணவி
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த சேர்ந்த திவ்யா என்ற மாணவி இந்திய அளவில் 10ம் இடத்தையும், தமிழ்நாட்டில் முதல் இடத்தையும் பிடித்து அசத்தினார்.

கனிமொழி வாழ்த்து
இதனிடையே, கனிமொழி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், மாநிலத்தில் முதலிடமும் இந்திய அளவில் 10ம் இடமும் பெற்று, இந்திய வனப்பணி தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்ற திவ்யா அவர்களை வாழ்த்தி மகிழ்கிறேன். இவ்வாறு திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications