திமுகவில் வரும் அதிரடி.. சட்ட விதிகளில் மாற்றம்.. காத்திருக்கும் சரவெடி.. "மாஸ்டர் பிளான்!"
சென்னை: திமுக தலைமைப் பதவிகளில் ஜாதிகளுக்கும் முக்கியத்துவம் தரும் வகையில் துணைப் பொதுச்செயலாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக சென்னையில் நடைபெறும் திமுக பொதுக்குழுவில் கட்சி சட்ட விதிகளில் திருத்தங்கள் கொண்டுவரப்படக் கூடும் என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.
சென்னையில் அக்டோபர் 9-ந்தேதி நடக்கும் திமுகவின் பொதுக்குழுவில் தலைவர், பொதுச் செயலாளர்,பொருளாளர், தனிக்கை குழு உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுக்கு ஒப்புதல் பெறப்படவிருக்கிறது. இந்த பொதுக் குழுவில், கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்ய கட்சியின் சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வர ஆலோசிக்கப்பட்டிரு ப்பதாக திமுக தரப்பிலிருந்து தகவல்கள் கிடைக்கின்றன.

திமுக சட்டவிதிகள்
திமுகவின் சட்டவிதி களின் படி தற்போது 5 துணைப் பொதுச்செயலாளர்கள் இருக்கிறார்கள். அந்த 5 பேரில் மகளிருக்கு ஒரு பிரதிநிதித்துவமும், தலித் சமூகத்தினருக்கு ஒரு பிரதிநிதித் துவமும் இருக்க வேண்டும். அதன்படி, மகளிர் பிரதிநிதித்துவத் தில் சுப்புலட்சுமி ஜெகதீசனும் தலித் பிரதிநிதித்துவத்தில் அந்தியூர் செல்வராஜும் இருந்தனர். தனது பதவியை சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்து விட்டதால் அந்த இடம் காலியாக இருக்கிறது.

சுப்புலட்சுமி ராஜினாமா எதிர்வினை
சுப்புலட்சுமி ஜெகதீசன் இடத்தில் கொங்கு வேளாளர் சமூகத்தினர் ஒருவருக்கே வாய்ப்பளிக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் சுப்புலட்சுமியின் நியமனம் என்பது மகளிர் பிரதிநிதித்துவம் அடிப்படையில் அமைந்ததே தவிர, சமூக ரீதியாக நியமிக்கப்படவில்லை. அதனால் சமூக கோரிக்கையாக கோரக்கூடாது என தலைமையில் இருந்து பதில் தரப்பட்டுவிட்டது. சுப்புலட்சுமி ஜெகதீசன் இடத்துக்கு மற்றொரு மகளிரைத்தான் நியமிக்க வேண்டும். அந்த இடத்துக்கு கனிமொழி கருணாநிதி, கனிமொழி என்.வி.என். சோமு, கீதாஜீவன் உள்ளிட்ட பலரது பெயர்கள் பரிசீலிக்கப்படுகின்றன.

தலைமைக்கு பரிந்துரை
இப்படிப்பட்ட சூழலில், கட்சியின் மாநில பொறுப்புகளில் கொங்கு வேளாளர் சமூகத்துக்கு பிரதிநிதித் துவம் இல்லாமல் இருக்கிறது என்று ஒரு விவாதம் கட்சியில் மேலிடத்தில் நடந்துள்ளது. ஆகையால் துணைப் பொதுச்செயலாளர் நியமனத்தில் கொங்கு வேளாளர் சமூகத்துக்கு வாய்ப்பளிக்கலாம் என ஸ்டாலினிடம் ஒரு ரிப்போர்ட் தரப்பட்டது. தற்போதைய நிலையில் துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா ஆகியோரை மாற்ற இயலாது என்பதால் புதிய யோசனை தலைமையிடம் முன்வைக்கப்பட்டதாம்.

து.பொ.செ. பதவி எண்ணிக்கை அதிகரிப்பு
அதாவது திமுக துணைப் பொதுச்செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்தால் ஜாதிய பிரதிநிதித்துவ சிக்கலுக்கு தீர்வு காணலாம் என்பதுதான் அது. கொங்கு வேளாளர் மற்றும் நாயுடு சமூகத்தின் பிரதிநிதித்துவத்திற்காக துணைப் பொதுச்செயலாளர் களின் எண்ணிக்கையை 5-லிருந்து 7 ஆக மாற்றி கட்சி விதிகளில் திருத்தம் செய்யுங்கள். வன்னியர் சமூகத்திற்கு கொடுக்க வேண்டும் எனில் துணை அமைப்புச் செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து அதில் நியமித்து விடுங்கள் என்றும் ஆலோசனை கொடுக்கப்பட்டி ருக்கிறது.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications