Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்த 4 ஏக்கர் நிலம்.. தாம்பரம் போலீஸ் கமிஷ்னர் ஆபிஸ் எங்கு வருது தெரியுமா? ஹைகோர்ட் அனுமதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாம்பரத்தில் தனியார் கல்வி நிறுவனத்திடம் இருந்து மீட்கப்பட்ட 4 ஏக்கர் நிலத்தில் புதிய காவல் ஆணையர் அலுவலக கட்டிடம் கட்டுமான பணியை தொடங்கி, விரைந்து முடிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கடந்த 1944 ஆம் ஆண்டு சென்னை தாம்பரத்தில் 9 ஏக்கர் 77 செண்ட் நிலத்தை பல்வேறு நிபந்தனைகளுடன் 'வள்ளுவர் குருகுலம்' என்ற கல்வி நிறுவனத்துக்கு அரசு ஒதுக்கியது.

இதில் சுமார் 5 ஏக்கர் நிலத்தில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வரும் நிலையில் மீதமுள்ள 4 ஏக்கர் 77 செண்ட் நிலம் இது வரை பயன்படுத்தப்படாமலேயே இருந்து வருகிறது.

Do you know where Tambaram New police commissioner office is located? HC granted permission

பயன்படுத்தப்படாமல் உள்ள நிலத்தில் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகம் கட்ட முடிவெடுத்த அரசு அந்த நிலத்தை மீட்டெடுத்தது.

இந்நிலையில், அரசு ஒதுக்கிய 9.77 ஏக்கர் நிலத்திற்கும் பட்டா வழங்க உத்தரவிடக்கோரி 'வள்ளுவர் குருகுலம்' கல்வி நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கல்வி பயன்பாட்டுக்காக அரசு ஒதுக்கிய நிலத்தின் எதிரே தனியார் நிலத்தை வாங்கிய இந்த கல்வி நிறுவனம், அந்த இடத்தை நர்சிங் கல்லூரி, பெட்ரோல் பங்க், உணவகங்கள் உட்பட பல தனி நபர்களுக்கு வாடகை விட்டு பெரிய அளவில் வருமானம் ஈட்டு வருவதால், அரசு ஒதுக்கிய நிலத்துக்கு பட்டா வழங்க கூடாது என அரசு தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் தெரிவித்தார்

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அரசு விதித்த நிபந்தனைகளை கல்வி நிறுவனம் மீறியதுடன், நிலத்தை பயன்படுத்தப்படாமல் உள்ளதால் நிலத்துக்கு பட்டா வழங்கும்படி உத்தரவிட முடியாது என மறுத்து, மனுவை தள்ளுபடி செய்தார்.

மேலும், தாம்பரம் காவல் ஆணையர் அலுவலக கட்டிடத்துக்காக ஒதுக்கப்பட்ட இந்த நிலத்தில், ஆணையர் அலுவலக கட்டுமான பணிகளை துவங்கி விரைந்து முடிக்கும்படியும் நீதிபதி உத்தரவிட்டார்.

தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகம் தற்போது எங்கு உள்ளது ? தற்போது தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகம் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

சென்னை மாநகரக் காவல் ஆணையரகத்தின் கீழ் செயல்பட்டு வந்த தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், பள்ளிக்கரணை, சேலையூர்,சிட்லப்பாக்கம், பீர்க்கன்கரணை, குன்றத்தூர், கானாத்தூர், சங்கர்நகர், பெரும்பாக்கம், செம்மஞ்சேரி,கண்ணகி நகர் உள்ளிட்ட 13 காவல் நிலையங்களுடன், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 2 காவல் நிலையங்கள் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 5 காவல் நிலையங்கள் ஆகியவை இணைக்கப்பட்டு தாம்பரம் காவல் ஆணையரகத்தின் கீழ் இயங்கி வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+