ரூ.1 இருக்கா? ஒரே ஒரு ரூபாய் கட்டணத்தில் 200 ரூம்கள்.. மூணாறு உங்களை அழைக்கிறது.. இதோ சூப்பர் சலுகை
சென்னை: கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள், மலைவாசஸ்தலங்களுக்கு படையெடுக்கிறார்கள்.. அந்தவகையில் மூணாறு பற்றின ஒரு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
குண்டலை, நல்ல தண்ணி, முத்தரப்புழை என்ற 3 ஆறுகள் சங்கமிக்கும் ஆறு என்பதால், அந்த ஊருக்கு மூணாறு என்று பெயர் வந்ததாம். மூணாறு என்றாலே, நம்முடைய கண்களை கொள்ளைகொள்வது அங்குள்ள தேயிலை தோட்டங்கள்தான். இதற்காகவே அனுமதிக்கப்பட்டுள்ள வாகனத்தில் மட்டும் தான் சுற்றுலா பயணிகள் சென்று வர வேண்டும்.

இரவிகுளம்: அதேபோல, இரவிகுளம் தேசிய பூங்காவிற்கு உள்ளே அமைந்துள்ளது ஆனைமுடி சிகரம். தென்னிந்தியாவிலேயே உயரமான சிகரம் இதுதான். கிட்டத்தட்ட 2700 மீட்டர் உயரம் கொண்டது. மலையேற்றத்திற்கு இது மிகச்சிறந்த இடமாகும். இங்கு அபூர்வமான விலங்குகள், பாம்புகள், பட்டாம்பூச்சி மற்றும் மூலிகை செடிகள் உள்ளன.
மூணாறு நகரத்திலிருந்து 13 கிமீ தூரத்தில் மாட்டுப்பெட்டி அணைக்கட்டு உள்ளது.. இங்கு படகு சவாரி செய்ய்யலாம். இதைத்தவிர, மாட்டுப்பட்டி கால்நடைப் பண்ணை, டாப் ஸ்டேஷன், தேயிலைக் கண்காட்சி, மரையூர் சந்தனக் காடுகள், குண்டலா ஏரி, அட்டுக்காடு நீர்வீழ்ச்சி, மலர் பூங்கா, சின்னாரு வனவிலங்கு சரணாலயம், லக்கோம் நீர்வீழ்ச்சி இப்படி ஏகப்பட்ட இடங்கள் மூணாறுவில் சுற்றுலா பயணிகளை கட்டிப்போட்டு விடுகின்றன.
தனுஷ்கோடி: மூணாறிலிருந்து இருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெநடுஞ்சாலையில் 2வது மைல் வியூ பாயிண்ட் அமைந்துள்ளது. இந்த வியூ பாய்ண்ட் மூணாறின் சிறந்த சூரிய அஸ்தமன இடமாக விளங்குகிறது.

தற்போது கோடை காலம் துவங்கிவிட்டது.. வசந்த காலத்தின் வருகையை வரவேற்கும் வகையில் ஜக்ராந்தா மலர்கள் தற்போது பூத்துக் குலுங்க ஆரம்பித்துவிட்டன. பள்ளிவாசல் எஸ்டேட் பகுதி மற்றும் மூணாறு – மறையூர் சாலை பகுதி தேயிலை தோட்டத்திற்கு இடையே இயற்கையை ஊதா வண்ணங்களில் தீட்டியது போல ஜக்ராந்தா மலர்கள் பூத்துக் குலுங்குவது காண்பவர்களின் கண்களுக்கு விருந்தாக அமைகிறது.
அதிரடி அறிவிப்பு: இந்நிலையில், சுற்றுலா பயணிகளுக்காக கோடையை முன்னிட்டு சிறப்பு சலுகையை சுற்றுலா வழிகாட்டி சங்கம் அறிவித்துள்ளது.. அந்தவகையில், மூணாறில் மார்ச் 27ல் தங்குவதற்கு முதலில் முன்பதிவு செய்வோருக்கு 200 அறைகள் தலா ரூ. 1 கட்டணத்தில் வழங்க போகிறார்களாம்..
அதாவது, மூணாறில் இரவு சுற்றுலா வழிகாட்டி சங்கத்தை ஊராட்சி தலைவர் தீபா தொடங்கி வைத்துள்ள நிலையில், இச்சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது..
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications