Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு - திமுக அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி திமுக தலைவரும், முதல்வருமான மு.க ஸ்டாலினுடன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்புக்கு பிறகு திமுக கூட்டணியில் ஈரோடு கிழக்குத்தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா (வயது 46), உடல்நலக்குறைவால் கடந்த 4- ஆம் தேதி மரணம் அடைந்தார். இதனை அடுத்து ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காலியானது.

1951-ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஒரு தொகுதி காலியானால் அங்கு 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. எனவே ஈரோடு இடைத்தேர்தலில் விரைவில் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்ப்பு நிலவியது.

பிப்ரவரி 27-ந் தேதி இடைத்தேர்தல்

பிப்ரவரி 27-ந் தேதி இடைத்தேர்தல்

அதன்படி, நேற்று மூன்று மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்போடு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதியையும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதிக்கான தேர்தல் பிப்ரவரி 27-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது. இதனால் தற்போதே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது.

காங்கிரஸ் கட்சி தான் போட்டியிடும்

காங்கிரஸ் கட்சி தான் போட்டியிடும்

இந்த நிலையில், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியே அங்கு மீண்டும் போட்டியிடும் என்று கூறப்பட்டு வந்தது. இதை ஆமோதிக்கும் வகையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி , இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தான் போட்டியிடும். இது எங்களுடைய தொகுதி. நாங்கள் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி.

மு.க ஸ்டாலினுடன் சந்திப்பு

மு.க ஸ்டாலினுடன் சந்திப்பு

எங்களின் கூட்டணி கட்சிகளான திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் எங்களுக்கும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்க உள்ளோம். இன்று மாலை அனைத்து தலைவர்களையும் சந்திக்க உள்ளோம்" என்றார். இந்த நிலையில் இன்று இரவு தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலினை கே.எஸ் அழகிரி சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

 திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டி

திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டி

இந்த சந்திப்பு நடைபெற்ற சிறிது நேரத்தில் ஈரோடு கிழக்க்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று திமுக அறிவித்தது. 2021 தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளதால் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக திமுக அறிவித்துள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவனின் மருமகளும் மறைந்த சட்டமன்ற உறுப்பினர் திருமகனின் இணையருமான பூர்ணிமா அவர்களை ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வைப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

 வேட்பாளர் யார்?

வேட்பாளர் யார்?

ஈவிகேஎஸ் இளங்கோவனின் இரண்டாவது மகன் சம்பத் இளங்கோவன் போட்டியிடலாம் எனவும் சொல்லப்படுகிறது. விரைவில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிகிறது. அதிமுகவை பொறுத்தவரை அக்கட்சி போட்டியிட்டால் சின்னம் தொடர்பாக பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால், கடந்த தேர்தலில் போட்டியிட்ட தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியே போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.

 ஜி.கே வாசன் பேட்டி

ஜி.கே வாசன் பேட்டி

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டது. ஆனால், இந்த முறை தனிச்சின்னத்தில் போட்டியிட வலியுறுத்தப்படும் எனவும் பேசப்படுகிறது. இன்று காலை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசனை அதிமுக மூத்த தலைவர்கள் சந்தித்து இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜிகே வாசன், அதிமுக கூட்டணியில் வேட்பாளர் ஓரிரு நாளில் அறிவிக்கப்படுவர். எங்கள் இலக்கு கூட்டணி உறுதியாக வெற்றி பெற வேண்டும் என்பதுதான்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+