அகலாத கஜா புயல் விட்டுச் சென்ற சுவடுகள்.. தென்னை ஓலைகளுடன் விவசாயிகள் பேரணி
சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மாபெரும் பேரணியில் பங்கேற்றனர்.
வங்கக் கடலில் உருவான கஜா புயல் கடந்த மாதம் டெல்டா மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் ஏராளமான தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்தன. இந்த தென்னைகளை நம்பி இருந்த விவசாயிகளின் வாழ்வாதாரம் கடும் கேள்விக்குறியானது.

கஜா புயல் தாக்கி இன்றுடன் ஒரு மாதம் முடிவடைந்த பின்னரும் இயல்பு நிலை இன்னும் திரும்பவில்லை. இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் தென்னை மரங்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய விவசாயிகள் பெரும் பேரணி நடத்தினர். தென்னை ஓலைகளையும் அவர்கள் கைகளில் ஏந்தி சென்றனர். தஞ்சை, பட்டுக்கோட்டையில் இப்பேரணி நடந்தது.
பட்டுக்கோட்டை காசாங்குளத்தில் இருந்து பட்டுக்கோட்டை மார்க்கெட் வரை தென்னை மரத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் வகையில் இளைஞர்கள் பேரணி சென்றனர். காசாங்குளத்தில் இருந்து பேரணியாக சென்று முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்.

தங்கள் வாழ்வாதாரமான தென்னங்கன்றுகள் தென்னை மரங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகள் வாங்கிய அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். அரசு தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணத்தை முழுமையாக அரசே ஏற்க வேண்டும்.
அதுமட்டுமின்றி மறுசாகுபடிக்கு தேவையான தென்னங்கன்றுகள் மற்றும் தேவையான பொருட்களையும் நிவாரணங்களையும் அரசு உடனடியாக வழங்க வேண்டும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் கடைகள் அனைத்தையும் தள்ளுபடி செய்யவேண்டும். அதேபோல சேதமடைந்த வீடுகள் பயிர்களுக்கு முறையான கணக்கெடுப்பு நடத்தி அனைவருக்கும் நிவாரணத்தை அளிக்க வேண்டும்.
கிராமப்புறங்கள் அனைத்திற்கும் மின் இணைப்புகள் உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த பேரணி நடைபெற்றது. பேரணியில் இந்திராகாந்தி் இளைஞர் அமைப்பு மற்றும் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் விவசாயிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications