சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் கொண்டுவரப்படாது என உறுதி வேண்டும்.. விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
சேலம்: சேலம் மாவட்டம் பூலாவரி அருகே உள்ள பூஞ்சைக்காடு பகுதியில் சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த திட்டத்தை அரசு கைவிட வலியுறுத்தியும் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கால்நடைகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை - சேலம் இடையே எட்டு வழிச்சலை அமைக்கும் திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் முன்னெடுக்கப்பட்டது.
10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நடைமுறைப்படுத்துவதாக அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்திற்காக சுமார் 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் அரசால் கையகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

விவசாயிகள் எதிர்ப்பு
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த திட்டத்திற்கு எதிராக திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர். தொடர்ந்து போராட்டம் வலுத்ததால் இந்த திட்டத்தை செயல்படுத்துவதை அதிமுக அரசு நிறுத்தி வைத்தது.

மீண்டும் செயல்படுத்த
இந்த நிலையில், எட்டு வழிச்சாலை திட்டத்தை மீண்டும் செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனால், விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சாலை விரிவாக்கம் என்பது தவிர்க்க முடியாது என தமிழக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தது விவசாயிகளை மேலும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கால்நடைகளுடன் ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில், சென்னை- சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் இனிமேல் கொண்டு வரப்படாது என அரசு உறுதி அளிக்க கோரி சேலம் அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சேலம் மாவட்டம் பூலாவரி அருகே உள்ள பூஞ்சைக்காடு பகுதியில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கால்நடைகளுடன் சேர்ந்து சேலம்- சென்னை எட்டு வழிச்சாலை திட்டம் கொண்டு வரப்படாது என அரசு உறுதியளிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

முழுமையாக கைவிட வேண்டும்
சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தப்படி 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது குடும்பத்தினருடன் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். மேலும் சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என்று அரசு உறுதியளிக்க வேண்டும் என்றும் இந்த எட்டு வழிச்சாலை திட்டத்தை அரசு முழுமையாக கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications