ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக!
சென்னை: திமுகவிற்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில், அக்கட்சியின் முக்கியப் புள்ளியும், தி.நகர் தொகுதி முன்னாள் சட்டசபை உறுப்பினருமான ஜெ.கருணாநிதி தற்பொழுது அதிகாரப்பூர்வமாகத் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளார்.

திமுகவில் கடந்த சில காலமாகவே புகைந்து கொண்டிருந்த உள்கட்சி அதிருப்தி தான் இந்த திடீர் கட்சி தாவலுக்கு முக்கியக் காரணம் என அரசியல் வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன.
கட்சி தாவலின் பின்னணி என்ன?
சென்னை திமுகவில் செல்வாக்குமிக்க வட்டாரச் செயலாளராக இருந்து, பின்னர் தி.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உயர்ந்தவர் ஜெ.கருணாநிதி. தொகுதி மக்களிடம் நெருக்கமானவராக இருந்தாலும், கடந்த சில மாதங்களாகவே திமுகவின் தலைமை மற்றும் மாவட்டத் தலைமை மீது அவர் கடுமையான அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
அதற்கு காரணம் கடந்த 2026 சட்டசபை தேர்தலில் கருணாநிதிக்கு திமுக தலைமை சீட் கொடுக்கவில்லை. அவருக்கு பதிலாக அவரது அண்ணன் மகனுக்கு சீட் கொடுக்கப்பட்டது. இதனால் கடும் அதிருப்தியில் இருந்த கருணாநிதி, தனது பகுதிச் செயலாளர் பதவியை கடந்த மார்ச் மாதம் ராஜினாமா செய்தார்.
கட்சி பணிகளில் ஈடுபடாமல் இருந்த நிலையில் கருணாநிதியின் மகள் தவெகவில் இணைந்தார். அத்துடன் திநகர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட புஸ்ஸி ஆனந்த்திற்கு பிரச்சாரமும் செய்திருந்தார். கருணாநிதியும் பிரச்சாரம் செய்கிறார் என தகவல்கள் கிடைத்த போது அவர் அதை மறுத்தார்.
இந்த நிலையில் இன்று அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர்கள், மாஜி எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்துள்ளனர். அதில் திமுகவில் இருந்து விலகிய கருணாநிதி, தவெகவில் இணைந்தார்.
மகளின் 'சைலண்ட்' ஆபரேஷன்!
கருணாநிதியின் இந்தத் திடீர் முடிவுக்குப் பின்னால் அவரது மகள் தான் மாஸ்டர் பிரைனாகச் செயல்பட்டுள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. கருணாநிதியின் மகள் ஏற்கனவே தவெகவில் இணைந்து தீவிரமாகப் பணியாற்றி வருகிறார்.
குறிப்பாக, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் அரசியல் நகர்வுகள் மற்றும் தேர்தல் பிரச்சாரங்களின் போது, உடனிருந்தவர் கருணாநிதியின் மகள் தான் எனக் கூறப்படுகிறது. தவெக தலைமையுடன் தமக்கு ஏற்பட்ட நெருக்கத்தைப் பயன்படுத்தி, தன் தந்தையையும் தவெக கோட்டைக்குள் கொண்டு வந்துள்ளார் மகள் என்கிறார்கள்.
அதிமுகவைத் தொடர்ந்து திமுகவிற்கும் செக்!
சமீப நாட்களாக திருச்சி வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட அதிமுகவின் முன்னணித் தலைவர்கள் பலரைத் தனது பக்கம் இழுத்து வந்த தவெக, இப்போது ஆளும்கட்சியான திமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ-விற்கே வலைவீசிப் பிடித்துள்ளிருப்பது கோட்டை வட்டாரத்தை அதிர வைத்துள்ளது.
அதிமுக கோட்டையைத் தொடர்ந்து, தற்போது திமுகவின் முக்கிய விக்கெட்டுகளையும் தவெக சாய்க்கத் தொடங்கியிருப்பது வரும் காலங்களில் தமிழக அரசியலில் இன்னும் பல திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
விஜய்க்கு 25 நாள் ஆச்சு.. முதல் ஒப்பந்தம்.. 3 இடத்தில் 3 மெகா திட்டம்.. L&T நிறுவனம் ரூ.18600 கோடி முதலீடு! -
தமிழ்நாடு விஷம் குடித்து இருக்கிறது.. மக்கள் புரிந்து கொள்வார்கள்! தேர்தல் முடிவு பற்றி சுகி சிவம் பரபர பேச்சு -
சமூக நீதி முற்போக்குக் கூட்டணி.. கொளுத்தி போட்ட காங்.! விசிக நிலைபாடு என்ன? திருமாவளவன் விளக்கம் -
நேரடி அரசியலில் விஜய்யின் நிழல்.. திருச்சி கிழக்கு தொகுதியில் ஜெகதீஷ் பழனிசாமி போட்டி? தவெக முடிவு! -
ஒவ்வொரு அமைச்சருக்கும் டார்கெட் நிர்ணயித்த முதல்வர் விஜய்.. கேபினட் மீட்டிங் பற்றி நிர்மல் விளக்கம்! -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது! -
"விஜய் கோட் போடுவது பிரச்சனை இல்லை... எல்லாத்தையும் கோட்டை விடுவது தான் பிரச்சனை!" உதயநிதி தாக்கு -
குர்பானி கட்டுப்பாடு.. "நீதிமன்றத்தில் ஒரு பேச்சு, அமைச்சர் ஒரு பேச்சு ஏன்!" எஸ்டிபிஐ கடும் தாக்கு












Click it and Unblock the Notifications