Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிடப்பில் ஃபைல்கள்! இந்த ஆளுநர் மட்டுமல்ல எந்த ஆளுநரும் நமக்கு வேண்டாம்! நீதியரசர் சந்துரு அதிரடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை : பல்வேறு விவகாரங்களில் அதிகார துஷ்பிரயோகம் செய்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி மட்டுமல்ல எந்த ஆளுநரும் நமக்கு வேண்டாம் என்ற முடிவுக்கு நாம் விரைவில் தள்ளப்படுவோம் என முன்னாள் நீதி அரசர் சந்துரு கூறியிருக்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆளுநர் மாளிகையில் காசி தமிழ்ச் சங்கம் விழா தொடர்பான நிகழ்ச்சியில் பேசி ஆளுநர் தமிழ்நாட்டை தமிழகம் என்பது அழைப்பது சரியாக இருக்கும் என கூறியதாக குற்றம் சாட்டி திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கடுமையான கண்டனங்களை முன்வைத்தன.

ஏற்கனவே ஆளுநரை மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் இந்த விவகாரம் தமிழக முழுவதும் பலத்த கண்டனங்களை பெற்றது. மேலும் ஆளுநருக்கு தமிழக சட்டசபையிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது..

 ஆளுநர் விளக்கம்

ஆளுநர் விளக்கம்

இந்நிலையில் எனது கண்ணோட்டத்தை தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல பொருள் கொள்வது தவறானது மற்றும் யதார்த்ததுக்கு புறம்பானது என ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்,""2023 ஜனவரி 4-ஆம் தேதி அன்று ஆளுநர் மாளிகையில், சமீபத்தில் நிறைவடைந்த "காசியுடன் தமிழ் மக்களின் பழமையான கலாசார தொடர்பை கொண்டாடும்' ஒரு மாத காசி தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களைப் பாராட்டும் நிகழ்ச்சி' நடைபெற்றது.

 'தமிழகம்'

'தமிழகம்'

அந்நிகழ்வில் வரலாற்றுப் பண்பாடு பற்றிப் பேசும் போது, காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்க, 'தமிழகம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன். அந்தக் காலத்தில் 'தமிழ்நாடு' என்பது இருக்கவில்லை. எனவே வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில், 'தமிழகம்' என்பதை 'மிகவும் பொருத்தமான வெளிப்பாடு' என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன்.

தவறானது

தவறானது

கண்ணோட்டத்தை 'தமிழ்நாட்டின் பெயரை எனது மாற்றுவதற்கான பரிந்துரை போல' பொருள் கொள்வதோ அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பானது என்று தெரிவித்துக் கொள்கிறேன்." எனது பேச்சின் அடிப்படை புரியாமல், ஆளுநர் தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை' எனும் வாதங்கள், விவாதப்பொருளாகி இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம்" எனக் கூறப்பட்டுள்ளது.

நீதியரசர் சந்துரு

நீதியரசர் சந்துரு

இந்நிலையில், எந்த ஆளுநரும் நமக்கு வேண்டாம் என்ற முடிவுக்கு நாம் தள்ளப்படுவோம் என நீதியரசர் சந்துரு கூறியிருக்கிறார். அரசியல் அமைப்புச் சட்டமும் ஆளுநரின் அதிகார எல்லையும் என்ற தலைப்பில் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அவர்,"ஆன்லைன் சூதாட்ட தடை செய்ய இயற்றப்பட்ட அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் அதனை சட்டமாக நிறைவேற்றும் மசோதாவுக்கு ஒப்புதல் தர மறுக்கிறார். சூதாட்ட நிறுவனம் முதலாளிகளுக்கு ஆளுநர் தேனீர் விருந்து அளித்துக் கொண்டிருக்கிறார். இந்த ஆளுநர் மட்டுமல்ல எந்த ஆளுநரும் நமக்கு வேண்டாம் என்ற முடிவுக்கு நாம் விரைவில் தள்ளப்படுவோம்" என பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+