கஜா புயல் நிவாரண பணிகள் எந்தளவில் உள்ளது.. முதல்வர் பழனிச்சாமி அறிக்கை!
கஜா புயலை தொடர்ந்து நடத்தப்பட்ட மீட்பு பணிகள் குறித்து முதல்வர் பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை: கஜா புயலை தொடர்ந்து நடத்தப்பட்ட மீட்பு பணிகள் குறித்து முதல்வர் பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கஜா புயல் மிகப்பெரும் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. இயல்பு வாழ்க்கை மொத்தமாக நசிந்து போய் உள்ளது. இந்த புயலால் 7 மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கஜா புயல் பாதிப்பு குறித்தும், நடத்தப்பட்ட மீட்பு பணிகள் குறித்தும் முதல்வர் பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் கஜா புயலால் 45 பேர் பலியானது வருத்தமளிக்கிறது. கஜா புயலால் 102 மாடுகள், 633 ஆடுகள் உயிர் இழந்துள்ளது.

பலியான 45 பேரின் குடும்பங்களுக்கும் தலா 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். கஜா புயலால் 56,942 குடிசைகள் சேதம் அடைந்துள்ளது. 30,328 ஓட்டு வீடுகள் சேதம் அடைந்துள்ளது. இதற்கான இழப்பீடுகள் தனியாக வழங்கப்படும்.
நிவாரண பணிகள் போர்க்கால அடிப்படையில் நடக்கிறது. பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடந்து வருகிறது. விவசாயிகளுக்கு தகுந்த நிவாரணம் கணக்கிட்ட பின் வழங்கப்படும்.
கூடுதலாக ஐஏஎஸ் அதிகாரிகள் நிவாரண பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். அதிமுக அமைச்சர்கள் இந்த பணிகளை கண்காணிப்பார்கள். பணிகளின் போது மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு











Click it and Unblock the Notifications