ஆபாசமாக சித்தரிப்பு .. தி.மு.க பிரமுகர் ஜெயச்சந்திரன் மீது காயத்ரி ரகுராம் போலீசில் புகார்!
சென்னை: தன்னை ஆபாசமாக சித்தரித்த தி.மு.க பிரமுகர் ஜெயச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காயத்ரி ரகுராம் புகார் கொடுத்துள்ளார்.
பிரபல நடிகையும், தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவருமான காயத்ரி ரகுராம் உள்ளிட்ட பா.ஜ.க பிரமுகர்கள் பொங்கல் பண்டிகையின்போது பொங்கல் வைத்து கொண்டாடினார்கள்.
இதில் காயத்ரி ரகுராம் போட்டோவை வெளியிட்ட தி.மு.க பிரமுகர் ஜெயச்சந்திரன் அவரை ஆபாசமாக விமர்சித்து இருந்தார். இதற்கு பாஜக தரப்பில் இருந்து கடும் கண்டனம் எழுந்தது..

ஆபாச கருத்துக்கள்
''தி.மு.க பிரமுகர் ஜெயச்சந்திரன் எனது வீடியோவை பகிர்ந்து அவதூறு கருத்துக்கள் பதிவிட்டிருக்கிறார். பெண்கள் மீதான ஆன்லைன் துன்புறுத்தலுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபுக்கு ஏற்கனவே புகார் தெரிவித்து இருந்தார் காயத்ரி ரகுராம். தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், ''இது பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல். ஏற்றுக்கொள்ள முடியாதது. குற்றவாளியை தமிழக காவல்துறை கைது செய்ய வேண்டும்' என்று கூறி இருந்தார்.

போலீஸ் கமிஷனரிடம் புகார்
இந்த நிலையில் தி.மு.க பிரமுகர் ஜெயச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவு மாநிலத் தலைவர் பால்கனகராஜ் தலைமையில் காயத்ரி ரகுராம் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் மனு கொடுத்துள்ளார். தொடர்ந்து பெண்களை அவமதித்து வரும் ஜெயச்சந்திரனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இது மிகவும் தவறு
இதனை தொடர்ந்து நிருபர்களிடம் பேட்டியளித்த பால்கனகராஜ் கூறியதாவது:- பா.ஜ.க பிரமுகர் காயத்ரி ரகுராமை தி.மு.க பிரமுகர் ஜெயச்சந்திரன் ஆபாசமாக சித்தரித்துளளார். காயத்ரி ரகுராம் வீடியோவை எடுத்துக்கொண்டு தவறான முறையில் பயன்படுத்தி உள்ளார். இவர் தி.மு.க.வை சேர்ந்த பெண்களை இதுபோல் செய்வாரா?

செந்தில் குமார் எம்.பி எங்கே போனார்?
தி.மு.க ஆட்சியில் உள்ள நிலையில் தி.மு.க எம்.பி செந்தில் குமார், அல்லது கனிமொழி எம்.பி இதுபற்றி ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. தி.மு.க ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது என்று பால்கனகராஜ் கூறினார். தி.மு.க பிரமுகர் ஜெயச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பா.ஜ.க மகளிர் அணியினரும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். விரைவில் ஜெயச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார்












Click it and Unblock the Notifications