குட் ஃப்ரைடே - உலகமெங்கும் கிறிஸ்தவர்கள் புனித வெள்ளி அனுஷ்டிப்பு - தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
இன்று புனித வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்தவர்கள் புனித வெள்ளியை துக்க நாளாக கடைபிடிக்கின்றனர்.
சென்னை: ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டருக்கு முந்தைய வெள்ளிக்கிழமை உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களால் புனித வெள்ளி என்று அனுசரிக்கப்படுகிறது. கர்த்தராகிய ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளி. கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர்கள் நாள் முழுவதும் நோன்பையும் தவத்தையும் புனித வெள்ளியன்று கடைப்பிடிப்பார்கள். இன்றைய தினம் உலகெங்கிலும் புனித வெள்ளி கடைபிடிக்கப்படுகிறது.
ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் இருந்தார். அந்த நாட்களை கிறிஸ்தவர்கள் தவக்காலமாக கடைபிடித்து வருகின்றனர். ஏசுபிரான் சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்த நாளையே புனிதவெள்ளியாக கடைபிடிக்கின்றனர்.
கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் புனித வெள்ளி பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், இந்த சொல் வேறு சில மத புத்தகங்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த நூல்களில், ஏசு கிறிஸ்துவின் சீடர்களில் ஒருவரான யூதாஸ் இஸ்காரியோட்டுக்குப் பிறகு ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏசுவை காட்டிக்கொடுத்த சீடன்
முப்பது வெள்ளிக்காசுகளுக்காக ஏசுவை அவரது சீடராக இருந்த யூதாஸ் என்பவரே காட்டிக் கொடுத்தார் என்று வரலாறு கூறுகிறது. ஏசு கிறிஸ்துவைக் கைது செய்ய எதிர்பார்த்துக் கொண்டிருந்த அதிகாரிகளிடம் யூதாஸ் நேராகச் சென்றார். ஏசு கிறிஸ்துவைப் பற்றிய தகவல் வீரர்களுக்கு தெரிவிக்க யூதாஸ் 30 வெள்ளி நாணயங்களை வாங்கிக் கொண்டு காட்டிக்கொடுக்க ஜெருசலேம் காவலர்களால் ஏசு கைது செய்யப்பட்டார்.

சிலுவையில் அறையப்பட்டார்
முள் கிரீடம் அணிவிக்கப்பட்டு சிலுவையை சுமக்க வைத்து கல்வாரி மலைக்கு அழைத்து சென்றனர் காவலர்கள். கல்வாரி மலையில் உள்ள குன்றின் மேல் ஏசுவை சிலுவையில் அறைந்தார்கள். எசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள் வெள்ளிக்கிழமை என்று நம்பப்படுகிறது.

குட் ஃப்ரைடே
இந்த புனித வெள்ளியை இன்று கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கின்றனர். இன்று உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் புனித வெள்ளியை அனுஷ்டிக்கிறார்கள். இந்த நாளில் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, நற்கருணை வழிபாடு ஆகியவை நடைபெற்றது. இதில், திரளான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

ஈஸ்டர் கொண்டாட்டம்
இன்று முழுவதும் கிறிஸ்தவர்கள் ஒரு வேளை உணவு மட்டும் அருந்தி தவம் இருப்பர். இன்று இரவுடன் கிறிஸ்தவர்களின் தவக்காலம் முடிவுக்கு வரும். நாளை சனிக்கிழமை நள்ளிரவு 11 மணிக்கு மேல் ஈஸ்டர் கொண்டாட்டங்கள் தொடங்கும். மரித்த ஏசு உயிர்த்தெழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். இதனை முன்னிட்டு சிறப்பு பிராத்தனைகளும் நடைபெறும்.

ஈஸ்டர் பெருநாள்
ஏசுவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட நாளில் இருந்து மூன்றாவது நாள் அவர் உயிர்த்தெழுந்து தன்னுடைய சீடர்களுக்குக் காட்சி அளித்தார் என நம்பப்படுகிறது. அந்த நாளைத்தான் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் என்று சொல்லப்படும் உயிர்ப்புத் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். நாளை மறுநாள் ஈஸ்டர் பெருநாள் கொண்டாடப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications