ஒரு நாள் நிச்சயம் நடக்கும்.. செய்தே தீருவேன்! திடீரென அழகுத் தமிழில் பேசி.. சபதம் போட்ட ஆளுநர் ரவி!
சென்னை: இன்று வேலூரில் நடந்த சந்நியாசிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட ஆளுநர் ரவி தமிழில் பேசி வியப்பளித்தார்.
வேலூரில் நடக்கும் அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் சார்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் இன்று ஆளுநர் ஆர் . என் ரவி பேசினார். 5 நாள் நடைபெறும் பாலாறு பெருவிழாவில் இன்று ஆளுநர் ஆர். என் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஆளுநர் ரவி பல்வேறு சந்நியாசிகள் முன்னிலையில் சனாதன தர்மம் பற்றி பேசினார். அதிசயமாக அவர் முழுக்க முழுக்க தமிழில் பேசினார்.

தமிழில் உரை
தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்தில் எழுதி அதை பார்த்து பேசினாலும், பெரிதாக பிழை இன்றி.. சிறப்பான உச்சரிப்புகளோடு பேசினார். அதோடு பெரிதாக எழுதிய வார்த்தைகளை பார்க்காமல் நினைவில் இருந்ததை அப்படியே ஒப்புவித்தார். முக்கியமாக அவரின் சில உச்சரிப்புகள் ஆச்சர்யம் அடைய வைத்தது. இதுவரை தமிழில் பேசி பழக்கம் இல்லாதவர் சில வார்த்தைகளை சிறப்பாக உச்சரித்தார்.

நதிகள்
ஆளுநர் ரவி தனது உரையில், நதிகளை வழிபடுவது இந்த பாரதம் முழுக்க இருக்கும் வழக்கம். நாடு முழுக்க இந்த பழக்கம் உள்ளது. சில நதிகளை நாம் தினமும் பிரார்த்தனை செய்கிறோம். இது ஒன்றும் புதிது அல்ல. இது பாரதத்தில் பழங்காலமாக இருக்கும் பாரம்பரியம்.

ஆளுநர் உரை
நண்பர்களே தமிழ் மிகவும் பழமையான மொழி. அழகான மொழி. தமிழ் மிகவும் சக்திவாய்ந்த மொழி. தமிழ் மக்கள் போல தமிழ் பேச வேண்டும் என்பது எனது விருப்பம் ஆகும். ஒருநாள் அவர்களை போல தமிழ் பேச வேண்டும். அவர்களை போல உச்சரிக்க வேண்டும்.

ஆங்கிலம்
அதுவரை மட்டும் நான் ஆங்கிலத்தில் பேசுவேன். தமிழ் முழுமையாக கற்ற பின் தமிழர்களை பேசுவேன், என்று ஆளுநர் ரவி குறிப்பிட்டார் . அதன்பின் ஆங்கிலத்தில் பேசிய ரவி, நாம் பாலாற்றை வணங்க இங்கே வந்து இருக்கிறோம். இந்தியா முழுக்க நதிகளை வணங்கும் வழக்கம் உள்ளது. அது இங்கும் உள்ளது. இதுதான் நம்முடைய கலாச்சாரம். இதுதான் சனாதன கலாச்சாரம், என்று ஆளுநர் ரவி தனது உரையில் குறிப்பிட்டார் .
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications