Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரூப் 2, 2ஏ தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்... ஆண்களை விட பெண்களே அதிகம் - டிஎன்பிஎஸ்சி தலைவர்

குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு திட்டமிட்டபடி மே 21ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: குரூப்-2 தேர்வு திட்டமிட்டபடி மே 21-ம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் தெரிவித்தார். மாநிலம் முழுவதும் மொத்தம் 11.78 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

2022ம் ஆண்டு நடைபெற உள்ள குரூப் 2, 2ஏ தேர்வு, மே 21-ம் தேதி காலை 9.30 மணிக்குத் தொடங்கி நடைபெறும். மொத்தம் 116 நேர்காணல் கொண்ட பதவிகளுக்கும், நேர்காணல் இல்லாத 5,413 பதவிகளுக்கும் தேர்வு நடைபெற உள்ளது.

Group 2, 2A exam will be held as planned says TNPSC President Balachandran

இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஹால் டிக்கெட்டுகள் இணைய தள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளன. முதன்மைத் தேர்வுகள் தமிழ்நாட்டில் 32 மையங்களில், காலை 9 மணி முதல் 12:30 மணி வரை நடைபெற உள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன், மாநிலம் முழுவதும் 32 நகரங்களில் 117 மையங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெறும். மாலையில் நடைபெறும் தேர்வில் எந்த நேர மாற்றமும் இல்லை என்றார். தேர்வில் ஜெல் பேனா, பால் பாயிண்ட் பேனாக்களைப் பயன்படுத்தலாம்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு முகக்கவசம் கட்டாயம்... என்னென்ன கட்டுப்பாடுகள் தெரியுமா?
குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு திட்டமிட்டபடி மே 21ஆம் தேதி நடைபெற உள்ளது. காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது என்றார்.

இதற்காகத் தேர்வர்கள் 8.30 மணிக்கு வர வேண்டும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 8.59 மணி வரை மட்டுமே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். தேர்வர்கள் 12.45 மணி வரை தேர்வறைக்குள் இருக்க வேண்டும். தேர்வுக்காக 333 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Group 2, 2A exam will be held as planned says TNPSC President Balachandran

தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கு மொத்தம் 11.78 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆண் தேர்வர்கள் 4,96,247 பேரும், பெண் தேர்வர்கள் 6,81,089 பேரும் விண்ணப்பித்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 48 பேர் விண்ணப்பித்துள்ளனர். 14,531 மாற்றுத் திறனாளிகளும் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழ் வழியில் பயின்றதாக 79 ஆயிரத்து 942 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். சென்னையில் அதிகபட்சமாக 1, 15,843 பேர் தேர்வுஎழுத உள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன்தெரிவித்தார்.

இந்தத் தேர்வுகளுக்கான முடிவுகள், ஜூன் 5ஆம் தேதி வெளியாக உள்ளன. அதற்குப் பிறகு முதன்மைத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும். துறை ரீதியான பணி நியமனம் குறித்து மார்ச் 3ஆம் தேதி விரிவான அறிவிப்பு வெளியிடப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+