அசைந்தது கோட்டை.. "தூக்கியடிச்சிருவோம்".. திடீரென உளவுத்துறைக்கு பறந்த உத்தரவு.. தமிழக அரசின் அதிரடி
சென்னை: அரசு அதிகாரிகளில் எத்தனையோ நேர்மையானவர்கள் இருந்தாலும், சில இடங்களில் ஊழலும், லஞ்சமும் தலைவிரித்தாடி கொண்டேயிருக்கிறது. இதற்குதான் தமிழக அரசு சாட்டையை சுழற்றியிருக்கிறது.
அரசு துறையில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரித்தபடியே வருகிறது. ,இதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் ஊழல் வழக்கு தொடர்பாக சென்னை ஹைகோர்ட், கடுமையான கண்டனம் தெரிவித்து காட்டமும் வெளிப்படுத்தியிருந்தது..

அரசு அதிகாரிகள்: "அரசுத் துறைகளில் லஞ்ச, லாவண்யம் மலிந்துவிட்டது. அரசுத் துறைகளில் பணிபுரியும் அதிகாரிகள், அலுவலர்களுக்கு எதிராக அதிக அளவில் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளபோதும், போதிய நடவடிக்கை எடுக்கப்படாததால் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அரசுத் துறைகளில் பணிபுரிவோருக்கு சட்டத்தின் பயத்தை காட்டினால் மட்டுமே ஊழலை கட்டுப்படுத்த முடியும். ஊழல் புரியும் அரசு அதிகாரிகளின் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான நடைமுறைகளை வகுக்க வேண்டும். இதற்காக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவ வழக்கறிஞர் ஆர்.சிங்காரவேலனை நியமிப்பதாகவும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இதனிடையே, தமிழக அரசும் அடுத்தடுத்த அதிரடிகளை கையில் எடுத்துள்ளது.. அந்தவகையில், அரசு அலுவலகங்களில் அதிகாரிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும் என்று உளவுத்துறை போலீசாருக்கு அறிவுறுத்தியிருக்கிறதாம்..
முற்றுப்புள்ளி: காரணம், அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்குவது குறிப்பாக விஏஓ, ஆர்ஐ, தாசில்தார், யூனியன் நகராட்சி அலுவலகங்களில் இப்படியான லஞ்சம் லாவண்யங்கள் மலிந்து வருகிறது.. கவனிப்புகள் இல்லாமல் காரியங்கள் பெரும்பாலும் நடப்பதில்லை என்ற நடைமுறை சிக்கலும் உள்ளது.. அதனால்தான், தமிழக அரசு இதையெல்லாம் களைவதற்காகவும், லஞ்ச லாவண்யத்துக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைப்பதற்காகவும், சாட்டையை கையில் எடுத்துள்ளது.
அதன்படி, அரசு அலுவலகங்களில் அதிகாரிகளின் செயல்பாட்டை கண்காணித்து, பிரத்யேக அறிக்கை அனுப்புமாறு உளவுத்துறை போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாம்..
முக்கிய அறிவிப்பு: தமிழக சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் பூஜாரி, இதற்காகவே அறிவிப்பு ஒன்றையும் விடுத்துள்ளார்.. அனைத்து சிறைத்துறை சிறைத்துறை அதிகாரிகளுக்கும் அவர் அனுப்பியுள்ள அறிக்கையில் சொல்லி உள்ளதாவது:
"சிறைத்துறையில் தொடர்ந்து முறைகேடுகளில் ஈடுபட்டு, தங்களை திருத்திக் கொள்ள மறுக்கும் சிறைத்துறை பணியாளர்களை பணியிட மாற்றம் செய்து நடவடிக்கை எடுக்கப்படும்... இதை அனைத்து அதிகாரிகளும், தங்களுக்கு கீழ் பணியாற்றும் அனைத்து சிறைத்துறையினருக்கு தெரிவிக்க வேண்டும்" என்று அந்த அறிக்கையில் சிறைத்துறை டிஜிபி கேட்டுக் கொண்டுள்ளார். தமிழக அரசின் இந்த அதிரடியால், ஊழல் புழக்கங்கள், கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்றும் உறுதியாக நம்பப்படுகிறது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications