Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அசைந்தது கோட்டை.. "தூக்கியடிச்சிருவோம்".. திடீரென உளவுத்துறைக்கு பறந்த உத்தரவு.. தமிழக அரசின் அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு அதிகாரிகளில் எத்தனையோ நேர்மையானவர்கள் இருந்தாலும், சில இடங்களில் ஊழலும், லஞ்சமும் தலைவிரித்தாடி கொண்டேயிருக்கிறது. இதற்குதான் தமிழக அரசு சாட்டையை சுழற்றியிருக்கிறது.

அரசு துறையில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரித்தபடியே வருகிறது. ,இதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் ஊழல் வழக்கு தொடர்பாக சென்னை ஹைகோர்ட், கடுமையான கண்டனம் தெரிவித்து காட்டமும் வெளிப்படுத்தியிருந்தது..

Has the Tamil Nadu Gov issued a major order to the government officials and what are the reasons

அரசு அதிகாரிகள்: "அரசுத் துறைகளில் லஞ்ச, லாவண்யம் மலிந்துவிட்டது. அரசுத் துறைகளில் பணிபுரியும் அதிகாரிகள், அலுவலர்களுக்கு எதிராக அதிக அளவில் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளபோதும், போதிய நடவடிக்கை எடுக்கப்படாததால் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அரசுத் துறைகளில் பணிபுரிவோருக்கு சட்டத்தின் பயத்தை காட்டினால் மட்டுமே ஊழலை கட்டுப்படுத்த முடியும். ஊழல் புரியும் அரசு அதிகாரிகளின் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான நடைமுறைகளை வகுக்க வேண்டும். இதற்காக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவ வழக்கறிஞர் ஆர்.சிங்காரவேலனை நியமிப்பதாகவும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இதனிடையே, தமிழக அரசும் அடுத்தடுத்த அதிரடிகளை கையில் எடுத்துள்ளது.. அந்தவகையில், அரசு அலுவலகங்களில் அதிகாரிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும் என்று உளவுத்துறை போலீசாருக்கு அறிவுறுத்தியிருக்கிறதாம்..

முற்றுப்புள்ளி: காரணம், அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்குவது குறிப்பாக விஏஓ, ஆர்ஐ, தாசில்தார், யூனியன் நகராட்சி அலுவலகங்களில் இப்படியான லஞ்சம் லாவண்யங்கள் மலிந்து வருகிறது.. கவனிப்புகள் இல்லாமல் காரியங்கள் பெரும்பாலும் நடப்பதில்லை என்ற நடைமுறை சிக்கலும் உள்ளது.. அதனால்தான், தமிழக அரசு இதையெல்லாம் களைவதற்காகவும், லஞ்ச லாவண்யத்துக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைப்பதற்காகவும், சாட்டையை கையில் எடுத்துள்ளது.

அதன்படி, அரசு அலுவலகங்களில் அதிகாரிகளின் செயல்பாட்டை கண்காணித்து, பிரத்யேக அறிக்கை அனுப்புமாறு உளவுத்துறை போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாம்..

முக்கிய அறிவிப்பு: தமிழக சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் பூஜாரி, இதற்காகவே அறிவிப்பு ஒன்றையும் விடுத்துள்ளார்.. அனைத்து சிறைத்துறை சிறைத்துறை அதிகாரிகளுக்கும் அவர் அனுப்பியுள்ள அறிக்கையில் சொல்லி உள்ளதாவது:

"சிறைத்துறையில் தொடர்ந்து முறைகேடுகளில் ஈடுபட்டு, தங்களை திருத்திக் கொள்ள மறுக்கும் சிறைத்துறை பணியாளர்களை பணியிட மாற்றம் செய்து நடவடிக்கை எடுக்கப்படும்... இதை அனைத்து அதிகாரிகளும், தங்களுக்கு கீழ் பணியாற்றும் அனைத்து சிறைத்துறையினருக்கு தெரிவிக்க வேண்டும்" என்று அந்த அறிக்கையில் சிறைத்துறை டிஜிபி கேட்டுக் கொண்டுள்ளார். தமிழக அரசின் இந்த அதிரடியால், ஊழல் புழக்கங்கள், கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்றும் உறுதியாக நம்பப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+