ஊட்டி, கொடைக்கானல் போன்ற "வெப்ப பிரதேசங்களில்" வசிப்போர் சென்னைக்கு ஓடியாங்க.. ஆத்தீ என்னா குளிரு!
சென்னை: ஊட்டி, கொடைக்கானல், பெங்களூர் உள்ளிட்ட குளிர் பிரதேசங்களை வெப்ப பிரதேசம் என சொல்லும் அளவுக்கு சென்னையில் குளிர் வாட்டி வதைக்கிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. ஆனால் எதிர்பார்த்தபடி மழையில்லை என்றும் சொல்ல முடியாது, மழை பெய்தது என்றும் சொல்ல முடியாது. சில சமயங்களில் குறைந்த நேரத்தில் அதிக மழை பெய்தது.
இதனால் குளிரும் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் வடதமிழகத்திற்கு அந்த அளவுக்கு மழையில்லாமல் இருந்தது. ஆனால் தென் தமிழகத்தில் மழை பெய்து கொண்டிருந்தது. தற்போது தென் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழையும் உள்மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

2 நாட்களுக்கு
இதையடுத்து நாகை, தஞ்சை, திருவாரூர், புதுகை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு தென்தமிழகம், புதுவையில் மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

லேசான மழை
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து இன்று சென்னையில் லேசான மழை பெய்தது.

வெப்பநிலை
முகப்பேர், வளசரவாக்கம், போரூர், குரோம்பேட்டை, கோயம்பேடு, அமைந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது. இதனால் காலை முதல் ஜில்லென்ற சூழல் நிலவி வருகிறது. சென்னையில் வெப்பநிலையும் 25 டிகிரி உள்ளது.

மார்கழி குளிர்
பொதுவாக சென்னையில் வெயில் இருந்தால் அதை தணித்து கொள்ள ஊட்டி, கொடைக்கானல், பெங்களூர் உள்ளிட்ட குளிர்ச்சியான பிரதேசங்களுக்கு மக்கள் செல்வது வழக்கம். ஆனால் சென்னையில் குளிர்ச்சியான சூழல் உருவாகி பேன், ஏசி எல்லாம் ஆஃப் மோடில் இருப்பதால் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்டவற்றை விட சென்னையில் குளிர் அதிகமாக இருப்பதால் அந்த ஊர்களை வெப்ப பிரதேசம் என சொல்லும் அளவுக்கு மார்கழி மாதத்தினாலும், மழையாலும் குளிர் நிலவுகிறது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications