மொத்தமாக சென்னை திரும்பும் மக்கள்! உளுந்தூர்பேட்டை, பரனூர் ஸ்தம்பித்தது.. கடும் போக்குவரத்து நெரிசல்
சென்னை: தொடர் விடுமுறை முடிந்துள்ளதால் இப்போது பல்வேறு ஊர்களில் இருந்தும் பொதுமக்கள் திரும்பும் நிலையில், பல முக்கிய டோல்கேட்களில் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் கடந்த வியாழக்கிழமை முதல் தொடர் விடுமுறையாக இருந்தது. அதாவது கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி மிலாடி நபி கொண்டாடப்பட்டது. இடையில் ஒரு நாள் வெள்ளிக்கிழமை விடுமுறை எடுத்தால் சனி மற்றும் ஞாயிறு, அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி எனத் தொடர் விடுமுறையாக இருந்தது.

மேலும், பள்ளிகளுக்கும் இப்போது காலாண்டு தேர்வு விடுமுறையும் விடப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தரப்பினரும் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பினர். இதனால் புதன்கிழமை பல சிறப்புப் பேருந்துகளும் கூட இயக்கப்பட்டன. பஸ், ரயில், ஆம்னி பேருந்துகள் என ஒட்டுமொத்த சென்னையும் காலியானது.
கடும் போக்குவரத்து நெரிசல்: இதற்கிடையே தொடர் விடுமுறை முடிந்துள்ள நிலையில், இப்போது சொந்த ஊர் சென்ற மக்கள் மீண்டும் சென்னை நோக்கிப் படையெடுக்கிறார்கள். இதனால் பல இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு அருகே சிங்க பெருமாள் கோயில் பகுதியில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. அந்தளவுக்கு அங்கே போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருக்கிறது.

திருச்சி, மதுரை, கோவை எனச் சொந்த ஊரில் இருந்து மக்கள் பலரும் சென்னையை நோக்கிப் படையெடுத்து வருகிறார்கள். இதனால் உளுந்தூர்பேட்டை, பரனூர் சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகக் காணப்படுகிறது. அதேபோல ஆத்தூரில் டோல்கேட்டிலும் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பனையூரில் இருந்து அக்கரை சந்திப்பு வரை நீண்ட தூரத்திற்குச் சாலைகளில் வாகனங்கள் காத்திருக்கிறது.
ஊர்ந்து செல்லும் வாகனங்கள்: திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையிலும் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், உளுந்தூர்பேட்டை டோல்கேட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் உளுந்தூர்பேட்டை டோல்கேட்டில் வாகனங்கள் மெல்ல ஊர்ந்து கடந்து செல்லும் நிலையே இருக்கிறது. டோல்கேட்டில் இருந்து சுமார் 2 கிமீ தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நிற்கிறது.

கூட்டம் அளவுக்கு அதிகமாக இருக்கும் நிலையில், போக்குவரத்தைச் சமாளிக்க டோல்கேட்டில் எதிர்த் திசையிலும் மூன்று லேகன்களில் சென்னை செல்லும் வாகனங்கள் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கூட்டம் அதிகமாக இருப்பதால் விபத்து ஏற்படாமல் இருக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கிழக்கு கடற்கரைச் சாலை உத்தண்டி சுங்கச்சாவடியிலும் இதேபோல கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
நாளை காலை ஒட்டுமொத்தமாக அனைத்து வாகனங்களும் சென்னையில் குவியும் என்பதால் நகரிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம் இருக்கிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications