சொந்த ஊர் படையெடுக்கும் மக்கள்.. திக்குமுக்காடும் சென்னை.. இந்தாண்டும் பெருங்களத்தூரில் அதே நிலைதான்
சென்னை: தீபாவளியைச் சொந்த ஊர்களில் கொண்டாடச் சொந்த ஊர்களுக்குப் பொதுமக்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளதால், தலைநகர் சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பெருங்களத்தூரில் வழக்கம் போல இந்த ஆண்டும் வாகனங்களும் வரிசை கட்டி நிற்கின்றன.
Recommended Video
நாடு முழுவதும் வரும் வரும் வியாழக்கிழமை, நவ.4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை வருவதால், சென்னை போன்ற நகரங்களில் இருப்பவர்கள் வெளியூர்களுக்குச் செல்ல வசதியாக அதற்கு மறுநாள் அதாவது வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

4 நாட்கள் விடுமுறை
இதனை ஏற்றுத் தமிழ்நாடு அரசு, தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் நவம்பர் 5ஆம் தேதி பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 20ஆம் தேதி பணி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் வியாழக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ச்சியாக நான்கு நாட்கள் விடுமுறை தினங்களாக உள்ளது.

சொந்த ஊர் படையெடுக்கும் பொதுமக்கள்
இந்நிலையில், இன்றைய தினமே தலைநகர் சென்னையில் இருந்து தீபாவளிப் பண்டிகைக்காகப் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல தொடங்கிவிட்டனர். இதனால் நகரின் பல்வேறு பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து மதுரவாயில் செல்லும் சாலையில் போக்குவரத்து அதிகமாக உள்ளதால் பேருந்துகள் ஊர்ந்து செல்கிறது. அதேபோல் சென்னை நூறடி சாலையிலும் பேருந்துகள் ஊர்ந்து செல்வதைப் பார்க்க முடிகிறது.

திக்குமுக்காடும் பெருங்களத்தூர்
சென்னை புறநகர்ப் பகுதியான தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். குறிப்பாக பெருங்களத்தூரில் வழக்கம் போல இந்த ஆண்டும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சாலையில் அனைத்து வாகனங்களும் வரிசை கட்டி நிற்கின்றன.

நிரம்பி வழியும் பேருந்துகள்
பெரும்பாலான மக்கள் சொந்த ஊரை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளதால், அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள் என அனைத்திலும் கூட்டம் நிரம்பி வழிகின்றன. மேலும் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி, ஸ்ரீ பெருமந்தூர் சுங்கச்சாவடி, மேல் மருவத்தூர் அருகே உள்ள திண்டிவனம் சுங்கச் சாவடிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தீபாவளி நேரத்தைப் பயன்படுத்தி அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு ஏற்கனவே எச்சரித்துள்ளது. இதற்காக 1800 425 6151 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
சென்னை மெரினாவிற்கு வரும் ‘ரோப் கார்'.. இனி வானில் பறந்து கொண்டே பீச்சை ரசிக்கலாம்.. குட்நியூஸ் -
விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்! -
சென்னை வாடகைதாரர்கள் கவனத்திற்கு! 2026 புதிய வாடகை சட்டத்தில் மாற போகும் அந்த 5 முக்கிய விதிகள் என்ன -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு












Click it and Unblock the Notifications