ஜனவரி 16ல் ரேசன் கடைகளுக்கு லீவு..தமிழக அரசு சொன்ன காரணம் இதுதான்!
சென்னை: பொங்கல் பரிசு பொருட்கள் வழங்குவதற்காக ரேஷன் கடைகளுக்கு இன்று பணி நாளாக அறிவிக்கப்பட்டதற்கு ஈடாக வரும் 16ஆம் தேதி திங்கட்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 27ஆம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில் நிர்வாக காரணங்களுக்காக 16 ஆம் தேதி திங்கட்கிழமை விடுமுறை நாளாக மாற்றி தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் தற்போது பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதனையடுத்து, கடந்த ஜனவரி 9ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகள் அனைவரையும் சென்று சேர இன்றைய தினம் ரேஷன் கடைகளை வேலை நாளாக மாற்றப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளுக்கு மாதத்தின் 2வது வெள்ளிக் கிழமை விடுமுறை விடப்படும். ஆனால், தற்போது பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது காரணமாக வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளுக்கு இன்று பணி நாளாக அறிவிக்கப்பட்டதற்கு ஈடாக 16ம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் ஜனவரி 27 ஆம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில் நிர்வாக காரணங்களுக்காக ஜனவரி 16 விடுமுறை நாளாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
தற்போது ரேஷன் கடைகளில் 2.19 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு தலா 1000 ரூபாய் ரொக்கம் மற்றும் 1 கிலோ பச்சரிசி, சக்கரை மற்றும் கரும்பு ஆகியவை அடங்கிய தொகுப்புகள் கடந்த 9ஆம் தேதி முதல் தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது.
ரேஷன் கடைகளில் பொருட்களை வழங்கும் போது, பயோமெட்ரிக் வேலை செய்யாவிடில் குடும்ப அட்டைதாரரின் கண்களை ஸ்கேன் செய்து பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் பரிசோதனை முயற்சியாக நகர்புறம், கிராமப்புறங்களில் தலா ஒரு ரேஷன் கடைகளில் அமல்படுத்தப்படும் என தமிழக சட்டசபையில் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்
நியாய விலைக் கடைகளில் நடைபெறும் திருட்டை தடுக்கவும், பயனாளர்களுக்கு பொருட்களை கொண்டு சேர்ப்பதை உறுதி செய்யவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக மாநிலம் முழுவதும் பயோ மெட்ரிக் மூலமாக தற்போது ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
சில நேரங்களில் பயோமெட்ரிக் செய்யாமல் போனால் மக்கள் ரேஷன் பொருட்களை வாங்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதையடுத்து இன்று சட்டசபையில் பேசிய, அமைச்சர் சக்கரபாணி சோதனை முயற்சியாக கருவிழியை ஸ்கேன் செய்து பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்துள்ளார். இதன் மூலமாக ரேஷன் கடைகளுக்கு குடும்ப அட்டையை எடுத்து செல்ல தேவையில்லை என்ற சூழல் உருவாகும். தற்போது நியாயவிலை கடைகளில் 98.3 சதவிகிதம் பேர் பயோ மெட்ரிக் முறையில் பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
-
உத்தரப் பிரதேசம் vs தமிழ்நாடு! லோக்சபா தொகுதி மறுவரையறையில் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? ஷாக் தகவல்! -
வங்கிகளில் தங்க நகையை அடகு வைத்தவர் தவிர வேறு நபர் மீட்க முடியுமா? விதிமுறைகள் சொல்வது இதுதான்! -
Delimitation! தமிழகத்திற்கு மாபெரும் அநீதி! நாளை வீடுகளில் கருப்புக் கொடி போராட்டம்- ஸ்டாலின் -
மயிலாடுதுறை டூ ராமநாதபுரம்.. மழை கொட்டப்போகுது! லிஸ்ட் போட்ட வானிலை மையம்! -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
சிஸ்டமே மாறப்போகுது.. சென்னையின் போக்குவரத்தையே தடம் தெரியாமல் மாற்ற போகும்.. தங்கமான பிளான் -
சட்டமன்ற தேர்தல்.. எத்தனை நாள் டாஸ்மாக் விடுமுறை? வெளியான முழு விவரம்! -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. இன்னும் 2 நாட்கள் தான் இருக்கு! உடனே விண்ணப்பிங்க -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி












Click it and Unblock the Notifications