சென்னை ஏர் ஷோவிற்கு போனவர்களில்.. 4 பேரின் உயிரை குடித்த அந்த ஒரு விஷயம்.. சிக்கலே இதுதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஏர் ஷோவிற்கு சென்றவர்கள் 4 பேர் பலியாகி உள்ளனர். ஒருவர் ஏர் ஷோ சம்பவ இடத்திலேயே பலியாக 4 பேர் அந்த நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பிய நேரத்தில் பலியாகி உள்ளனர்.

அதன்படி நிகழ்ச்சியை பார்த்துவிட்டு பைக்கில் திரும்பியபோது ஓமந்தூரார் மருத்துவமனை அருகே பெருங்களத்தூரைச் சேர்ந்த சீனிவாசன் மயங்கியுள்ளார். ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், சீனிவாசன் பலியாகி உள்ளார். பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (48) மயக்கமடைந்து பலியாகி உள்ளார். திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (34) நெஞ்சுவலி ஏற்பட்டும் பலியாகி உள்ளார். அதேபோல் 60 வயதான ஜான் என்ற நபர் மெரினாவில் சாகச நிகழ்ச்சியைப் பார்த்துள்ளார். நிகழ்ச்சி முடிந்த நிலையில், அவர் மயங்கியதை அருகே இருந்தவர்கள் பார்த்துள்ளனர். இவரும் பலியாகி உள்ளார்.

chennai air show 2024 iaf airshow 2024 indian air force

சென்னை மெரினாவில் இன்று நடைபெற்ற இந்திய விமானப் படையின் வான் சாகச நிகழ்ச்சியைப் பார்வையிட வந்தவர்களில், 230 பேருக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 40 ஆம்புலன்ஸ்கள் மூலமாக 93 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹீட் ஸ்ட்ரோக் என்றால் என்ன?: ஹீட் ஸ்ட்ரோக் என்பது கடுமையான வேலை, வெயிலில் இருப்பதன் காரணமாக உடலில் நீர் இழப்பு ஏற்பட்டு, இதயம் தொடங்கி பல்வேறு உறுப்புகள் செயல் இழப்பது ஆகும். அதிக வெப்பநிலை மற்றும் கடுமையான சூடு ஆகியவற்றுள் நீண்டகாலம் இருந்தால் உடலின் வெப்பநிலை ஒழுங்குமுறை அமைப்பு செயல் இழப்பதை குறிக்கும்.

அதாவது உடலின் சூட்டை தணிக்கும் பல்வேறு பாகங்கள் மொத்தமாக செயல் இழந்து உறுப்பு பாதிப்புகள் ஏற்பட வழி வகுக்கும்.

ஹீட் ஸ்ட்ரோக் பொதுவாக உடலின் மைய வெப்பநிலை 104°F (40°C) அல்லது அதற்கு மேல் உயரும் போது ஏற்படும். வெப்ப பக்கவாதம் இதனால் உருவாகலாம். பெரும்பாலும் இதற்கு உடனடி மருத்துவ கவனிப்பு தேவைப்படுகிறது.

வெப்ப பக்கவாதம் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன:

கிளாசிக் ஹீட் ஸ்ட்ரோக்: இந்த வகை பொதுவாக வயதானவர்கள், நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சில மருந்துகள் அல்லது மருத்துவ நிலைமைகள் காரணமாக உடல் வெப்பத்தை கட்டுப்படுத்த முடியாதவர்களுக்கு ஏற்படுகிறது. அதிக வெப்பநிலைக்கு வெளிப்படும் நாட்களில் இது பெரும்பாலும் படிப்படியாக அதிகரிக்கும் . நீரிழப்பு மற்றும் உடல் வெப்பநிலை இதனால் அதிகரித்து மரணத்தை ஏற்படுத்தும்.

எக்ஸர்ஷனல் ஹீட் ஸ்ட்ரோக்: இந்த வகை பொதுவாக விளையாட்டு வீரர்கள் மற்றும் சூடான சூழலில் கடுமையான உடல் செயல்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு ஏற்படுகிறது. குறிப்பாக போதுமான நீரேற்றம் மற்றும் குளிரூட்டும் செயல்பாடுகளில் ஈடுபடாவிட்டால், சில நேரங்களில் இது ஏற்படலாம்.

வெப்ப பக்கவாதம் அல்லது ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக ஏற்படும் அறிகுறிகள்:

அதிக உடல் வெப்பநிலை (பொதுவாக 104°F அல்லது 40°Cக்கு மேல்)
மன குழப்பம், கிளர்ச்சி.
கண்களில் ஏற்படும் மாயத்தோற்றம் போன்ற போதையான நிலை.
சூடான, வறண்ட சருமம் (கிளாசிக் ஹீட் ஸ்ட்ரோக்கில்) அல்லது அதிக வியர்வை (எக்ஸர்ஷனல் ஹீட் ஸ்ட்ரோக்)
விரைவான இதயத் துடிப்பு மற்றும் ஆழமற்ற சுவாசம்
குமட்டல், வாந்தி மற்றும் தலைவலி
தசைப்பிடிப்பு அல்லது பலவீனம்
வலிப்புத்தாக்கங்கள் அல்லது சுயநினைவு இழப்பு

சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், இந்த ஹீட் ஸ்ட்ரோக் உறுப்பு சேதம், மூளை காயம் மற்றும் மரணம் உள்ளிட்ட தீவிர சிக்கல்களுக்கு வழிவகுக்கும். எனவே, வெப்பப் பக்கவாதத்தின் அறிகுறிகளைக் கண்டறிந்து, உடலைக் குளிர்விக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதும், மருத்துவ உதவியை நாடுவதும் முக்கியம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+