குறுக்கே வந்து ஆட்டத்தை கலைக்கும் சீமான்.. 4ம் இடத்துக்கு போன அதிமுக? எடப்பாடியை அதிர வைத்த கணிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் சீமான் 3ம் இடத்திற்கு வருவார்.. அதிமுக நான்காம் இடத்திற்கு தள்ளப்படும் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கண்டித்துள்ளார்.

லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில் பாமக, தேமுதிக இரண்டு கட்சிகளும் பாஜக கூட்டணிக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதிமுக கூட்டணிக்கு வர முடிவு செய்துள்ளன என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

How Seeman will take the place of AIADMK in Lok Sabha elections 2024?

கூட்டணி உறுதி: அதன்படி பாமக 6 சீட். தேமுதிக 3 சீட் என்று இறங்கி வர முடிவு செய்துள்ளன. இரண்டு ராஜ்யசபா இடங்கள் இரண்டு கட்சிக்கும் தலா 1 என்று பிரித்து கொடுக்கப்பட உள்ளன. இது போக பணம் கேட்டதில் நான்கில் ஒரு பகுதி பிரித்து கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதாம்.

இப்படிப்பட்ட நிலையில்தான் அவர் அளித்துள்ள பேட்டியில், அதிமுகவிற்கு ஏற்பட்டுள்ள சரிவால் சீமான் வேகமாக முன்னேறி வருகிறார். சீமான் தொடர்ந்து தனியாக நிற்கிறார். வெற்றியோ தோல்வியோ அவர் தனியாக நிற்கிறார். அவரின் அரசியல் வெல்வதால்தான் 3 சதவிகித வாக்கு வைத்து இருந்தவர் தற்போது 7 சதவிகித வாக்குகளை பெறும் அளவிற்கு முன்னேறி உள்ளார். வன்னியர் இடங்களில் கூட சீமானுக்கு சாதகமான நிலை உள்ளது.

அதிமுக - பாமக கூட்டணியில் பாமக இல்லாத இடங்களில் சீமான் வருவார். அங்கே வன்னியர் வாக்குகளை நாம் தமிழர் பலம் அடையும். இடம் கொடுக்கும் பேர அரசியலுக்கு சீமான் ஆப்பு வைக்க போகிறார். ஏற்கனவே அவர் இப்படி செய்து இருக்கிறார். நாமக்கல், திருப்பூர் போன்ற இடங்களில் வன்னியர் வேட்பாளர்களை நிறுத்துவதன் மூலம் சீமான் பல இடங்களை எடுப்பார்.

சீமான் தானே தனித்து நிற்கிறார். அவர்தானே தொடர்ந்து பேசுகிறார். அவருக்கு ஆதரவு கொடுப்போம் என்று நினைப்பார்கள். பாமக நிற்கும் இடங்களில் கூட சீமான் நாம் தமிழர் வாக்குகளை பிரிக்கும். கொங்கு மண்டலத்தில் கூட அதிமுக பெரிதாக இருக்காது. அதிமுகவின் சில வாக்குகள் கடந்த முறை போல அதிமுகவிற்கு கூட செல்லும் வாய்ப்புகள் உள்ளன.

பாமக இல்லாமல் அதிமுகவால் 3ம் இடத்திற்கு கூட வருவது கஷ்டம். பாமகவிற்கு 10 சீட் கொடுக்கவேண்டும். இல்லையென்றால் 3ம் இடத்திற்கு கூட வர முடியாது. நாம் தமிழர் ஏற்கனவே வன்னியர் வாக்குகளை பிரிக்கும். அதனால் அதிமுகவால் 3ம் இடத்திற்கு கூட வருவது கஷ்டம்.

வன்னியர்கள் காரணமாக எடப்பாடிக்கு வாக்குகள் சரியும் வாய்ப்புகள் உள்ளன. பாமக அதிக இடங்களை கேட்க வேண்டும். கேட்கும். அவர்களுக்கு தொடர்ந்து வாக்கு சதவிகிதம் உள்ளது என்று நிரூபித்துள்ளனர். இந்த சதவிகிதங்களை வைத்து இடங்களை கேட்க வேண்டும் என்று பாமக திட்டமிடுகிறது.

பாமக இனிமேல் தமிழ்நாட்டில் வெற்றி கூட்டணியை முடிவு செய்யும் கட்சி அல்ல. அது இரண்டாவது இடத்தை முடிவு செய்யும் கட்சி . 2009 வரைதான் பாமக பலமாக இருந்தது. 2004, 2009 வரை எல்லாம் பாமக வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருந்தது. இப்போது வடமாவட்டங்களில் பாமக வெறுமனே இரண்டாம் இடத்தை பிடிப்பதை தீர்மானிக்கும் சக்தியாக மாறி உள்ளது. இதனால் 2024 லோக்சபா தேர்தலில் சீமான் 3ம் இடத்திற்கு வருவார்.. அதிமுக நான்காம் இடத்திற்கு தள்ளப்படும் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கண்டித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+