இன்ஸ்பெக்டர் விவகாரம்.. கலெக்டருக்கு எதிராக காஞ்சிபுரத்தில் போஸ்டர்.. மனித உரிமை ஆணையமும் நோட்டீஸ்
கலெக்டர் பொன்னையாவுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் வழங்கி உள்ளது
சென்னை: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அத்திவரதர் வைபவத்தின்போது இன்ஸ்பெக்டரை அவமரியாதையாக பேசியது ஏன் என்பது குறித்து பதிலளிக்கவும் மனித உரிமைகள் ஆணையம் கலெக்டருக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
3 தினங்களுக்கு முன்பு, அத்திவரதர் தரிசனத்தின்போது, பொதுமக்கள் முன்னிலையிலேயே மாவட்ட கலெக்டர் பொன்னையா, இன்ஸ்பெக்டர் ஒருவரை திட்டியதும், ஒருமையில் பேசியதும் வீடியோவாக வெளிவந்து இணையத்தில் பரபரப்பானது.

கலெக்டர் இப்படி பேசியது மிகப்பெரிய விவாத பொருளாக மாறி, சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்று இந்த சம்பவத்துக்கு கலெக்டரே பகிரங்கமாக வருத்தம் தெரிவித்து முற்றுப்புள்ளி வைத்தார்.
"ஏதோ உணர்ச்சி வசப்பட்டு பேசிட்டேன், பெரிசுபடுத்த வேண்டாம்" என்று மன்னிப்பு கேட்டார். எனினும், இந்த விஷயத்தை மனித உரிமை ஆணையம்விடவில்லை. தானாக விஷயத்தை முன்வந்து விசாரணையை கையில் எடுத்துள்ளதுடன், இன்ஸ்பெக்டரை திட்டியது பற்றி பதிலளிக்க கலெக்டர் பொன்னையாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அது மட்டுமில்லை.. பொதுமக்கள், காவலர்கள் முன்பு இன்ஸ்பெக்டரை திட்டியது மனித உரிமை மீறல் ஆகாதா என்று கேள்வி எழுப்பியுள்ள மனித உரிமை ஆணையம், ஆட்சியர் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கேட்டுள்ளது. மேலும், ஆட்சியர் மீதான நடவடிக்கை குறித்து தலைமைச் செயலாளர் மற்றும் தமிழக டிஜிபி உள்துறை செயலாளருக்கும் 2 வாரங்களில் பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்திவரதர் தரிசனத்துக்கு இன்னும் 3 நாள்களே உள்ள நிலையில், ஒரு பக்கம் கலெக்டர் பொன்னையாவுக்கு எதிராக காஞ்சிபுரத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு வருவதும், இன்னொரு பக்கம், மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications