அதிகாரத்தை காட்ட மக்கள்? எப்படி நடத்தனும்னு பயிற்சி தேவை! போலீசுக்கு உத்தரவிட்ட மனித உரிமைகள் ஆணையம்
சென்னை : மாற்றுத் திறனாளிகள் மற்றும் மனநிலை சரியில்லாதவர்களை கையாளும் வகையில் காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே மனநலம் பாதிக்கப்பட்டவரான பென்டிங் ஜான் என்பவரை 2014 ஜூன் 22ம் தேதி காவல்துறையினர் வீடு புகுந்து தாக்கி நித்திரவிளை காவல் நிலையதிற்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த பெண்டிங் ஜான் பாளையம்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ஜூன் 27 ம் தேதி உயிரிழந்தார்.

மனித உரிமை ஆணையம்
கணவரின் மரணத்திற்கு காரணமான காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுத்து தனக்கு உரிய நீதி கிடைக்க உத்தரவிட வேண்டுமென மாநில மனித உரிமை ஆணையத்தில் அவரது மனைவி சுவர்ணா பாய் புகார் அளித்திருந்தார்.இந்த புகாரினை மனித உரிமைகள் ஆணைய உறுப்பினரான சித்தரஞ்சன் மோகன்தாஸ் விசாரித்தார்.

காவல்துறை
இந்நிலையில், காவல்துறை என்பது பலத்தையும் அதிகாரத்தையும் முன்னிலைபடுத்தும் நபர்களாகவே பொதுமக்களுக்கு தெரிவதாக குறிப்பிட்டுள்ள அவர், குற்றம்சாட்டப்பட்ட நபர் நிரபராதி அல்லது குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை அவர் குற்றமற்றவர் என்று கருதும் விதத்தில் நடத்தப்பட வேண்டுமென்ற மனநிலை அனைத்து காவல்துறையினரின் மனதில் கொள்ள வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

முறையான பயிற்சி
இந்த அணுகுமுறை காவல்துறையின் மனித உரிமை மீறல்களின் எண்ணிக்கை குறையும் என்றும் தெரிவித்துள்ளார். சட்டத்தைக் காப்பவர்கள் தேவையற்றவர்களாக காணப்படுவது கவலை அளிப்பதாகவும், காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டுவதில் மக்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து காவல்துறைக்கு முறையான பயிற்சி அளிக்கும்படியும் வலியுறுத்தி உள்ளார்.

காவலர்களுக்கு பயிற்சி
மாற்றுத் திறனாளிகள் மற்றும் மனநிலை சரியில்லாதவர்களை கையாளும் வகையில் காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்றும், அவர்களை கண்டறியும் வகையிலும், அவர்கள் பயப்படாதா வகையிலும் செயல்பட காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளார். மேலும், உயிரிழந்த பென்டிங் ஜான் குடும்பத்திற்கு 4 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டதுடன், குற்றம்சாட்டப்பட்டுள்ள காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
அண்ணா நகர் சிறுமி வழக்கு.. தினமும் விசாரணை நடத்தி விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications