”நான் இயேசு அல்ல, அடித்தால் திருப்பி அடிப்பேன்.." ஆக்ரோஷத்தில் பொங்கிய அண்ணாமலை!
சென்னை: தமிழக பாஜகவின் ஆக்ரோஷ அரசியல் தொடரும் என்று அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் 307வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மரியாதை செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை கூறுகையில், முதல்முதலாக கிழக்கிந்திய கம்பெனிக்கு வரி செலுத்த மாட்டேன் என்ற பெருமை பூலித்தேவனையே சாரும். நெல் மணியை கூட வரியாக செலுத்த மாட்டேன் என்று அவர் கூறிய வார்த்தைதான், இன்று நெற்கட்டான்சேவல் என்று ஊர் பெயராக மருவி இருக்கிறது என்று தெரிவித்தார்.

விநாயகர் சதுர்த்தி விடுமுறை
தொடர்ந்து அண்ணாமலை கூறுகையில், தமிழகத்தில் முதல்முதலாக விநாயகர் சதுர்த்திக்கு விடுமுறை அறிவித்த அரசு திமுக தான். அன்றைய முதலமைச்சர் அண்ணா தான். இன்று அண்ணா வகுத்த பாதையில் இருந்து எந்த அளவுக்கு மாறியுள்ளது என்பதற்கு, முதலமைச்சர் வாழ்த்து கூறாததன் மூலம் அறிய முடியும்.

அண்ணாமலை பேட்டி
அறநிலையத்துறை சார்பாக விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறுவதில் எந்த தவறும் இல்லை. பாஜக அனைத்து மத பண்டிகைகளுக்கும் வாழ்த்து தெரிவிக்கும். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், திமுக எம்பி-க்களும் பேசியுள்ளனர். பாஜக மத அரசியல் செய்கிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் சொல்லுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. அனைத்து மதத்தினருக்கும் வாழ்த்து கூறிவிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாஜகவை விமர்சிக்கட்டும் என்று தெரிவித்தார்.

பிடிஆர் பற்றி விமர்சனம்
தொடர்ந்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுடனான மோதல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறித்து நான் பதிவிட்டதில் எந்த தவறும் இல்ல. காரணம், நான் மரியாதையாக விமர்சித்திருந்தேன். டிஆர் பழனிவேல் தியாகராஜன் எப்போதும் தாத்தா, தந்தை அடையாளத்தை வைத்து அரசியல் செய்கிறார். அதனால் தான் இனிஷியலை எடுத்துவிட்டால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பினேன்.

விமர்சிக்க தகுதியில்லை
பொருளாதாரம் பற்றி பேசும் திமுக, மற்ற மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சியை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் அரசியலுக்கு சாபக்கேடு என்று என்னை விமர்சிக்க யாருக்கும் தகுதியில்லை. கிழக்கிந்திய கம்பெனியுடன் கொஞ்சிக் குலாவிய நீதிக்கட்சியின் வழியில் வந்தவர்கள் என்னை விமர்சிக்க என்ன அருகதை இருக்கிறது.

ஆவேசம் தொடரும்
திமுக மிரட்டும் பாணியில் அரசியல் செய்தால், என் பதில் ஆவேசமாக இருக்கும். என்னால் அரசியலில் இருந்து விலகி, என் தோட்டத்தில் விவசாயம் செய்து பிழைத்துக் கொள்வேன். ஆனால் திமுக அமைச்சர்களால் முடியுமா என்று கேள்வி எழுப்பினார். மேலும், ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டுவதற்கு நான் ஒன்றும் இயேசு கிறிஸ்து அல்ல. அடித்தால், திருப்பி அடிப்பேன் என்று ஆவேசமாக பேசினார்.
-
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர












Click it and Unblock the Notifications