சூப்பர் மார்கெட்களுக்கு நிகராக ரேஷன் கடைகள்! பரிசீலனையில் புதிய திட்டம்! விரைவில் சோதனை முயற்சி!
சென்னை: தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் சூப்பர் மார்கெட்களுக்கு இணையாக மளிகைப் பொருட்களை விற்பனை செய்யும் புதிய திட்டத்தை அரசு பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேபோல் ரேஷன் கடைகளை நவீனப்படுத்தும் நடவடிக்கைகளிலும் அரசு தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.
அமைச்சர் சக்கரபாணி மற்றும் உணவு பாதுகாப்புத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இது தொடர்பாக தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

நியாய விலைக்கடைகள்
தமிழகத்தில் 35,323 நியாய விலைக்கடைகள் இயங்கி வருகின்றன. அதில் 10,279 நியாய விலை கடைகள் பகுதிநேர கடைகளாகும். ரேஷன் கடைகளில் பல அதிரடி மாற்றங்களை புகுத்திய திமுக அரசு, அதனை அடுத்தக் கட்டத்தை நோக்கி கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் சூப்பர் மார்கெட்களை போல் மளிகைப் பொருட்களை பாக்கெட்கள் போட்டு ரேஷன் கடைகளில் விற்பனை செய்யும் திட்டத்தை சோதனை அடிப்படையில் அரசு தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வரவேற்பை பொறுத்து
மக்கள் மத்தியில் இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இதனை விரிவுப்படுத்துவது உள்ளிட்ட அடுத்தக்கட்ட முடிவுகளை அரசு எடுக்கும் எனத் தெரிகிறது. அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில், மண்ணெண்ணெய், உள்ளிட்ட பொருட்கள் பொதுவாக ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படுகிறது. ஒரு சில கடைகளில் மட்டும் டாண்டீ டீத்தூள் மற்றும் உப்பு விற்கப்படுகிறது.

முதற்கட்டமாக
மாவட்டம் ஒன்றுக்கு 20 கடைகளை மட்டும் முதற்கட்டமாக தேர்வு செய்து அங்கு மளிகைப் பொருட்கள் விற்பனை திட்டம் தொடங்கப்படலாம் எனத் தெரிகிறது. இதனால் எங்கெங்கு மளிகைப் பொருட்களை விற்பனை செய்யலாம் என்பதற்காக குறிப்பிட்ட நியாய விலைக் கடைகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அடையாளம் காணும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்களாம்.

ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.
உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவுத்துறை செயலாளராக ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்ட போதே அவர் நிச்சயம் இந்த துறையில் ஒரு புதுமையை புகுத்துவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது குறிப்பிடத்தக்கது. அதனை மெய்பிக்கும் வகையில் பல அதிரடி மாற்றங்கள் உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவுத்துறையில் நடக்க ஆரம்பித்துள்ளன.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங்












Click it and Unblock the Notifications