புரசைவாக்கம், போரூர் கடைகளில் ஓவர்.. திநகர் சூப்பர் சரவணா ஸ்டோர்களில் 5ஆவது நாளாக தொடரும் ரெய்டு
சென்னை: சென்னை தி நகரில் உள்ள சூப்பர் சரவணா, சரவணா செல்வரத்தினம் உள்ளிட்ட ஜவுளிக் கடைகள், தங்க நகை கடைகள் மற்றும் உரிமையாளர்களுக்கு சொந்தமான வீடுகள் என தொடர்ந்து 5- வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது.
சென்னை தி.நகர், புரசைவாக்கம், குரோம்பேட்டை, போரூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சூப்பர் சரவணா, சரவணா செல்வரத்தினம் உள்ளிட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகள் பார்ப்பதற்கே பிரம்மாண்டமாக காட்சியளிக்கின்றன.
இந்த கடைகள் 7 மாடிகளுக்கு மேல் இருக்கும். முற்றிலும் ஏசி வசதி செய்யப்பட்டு எஸ்கலேட்டர், லிப்ட் வசதிகளுடன் கேன்டீன் வசதியும் இருக்கிறது. இங்கு உள்ளே சென்றுவிட்டால் அம்மா, அப்பாவை தவிர அனைத்தையும் வாங்கிக் கொள்ளலாம்.

மக்கள் கூட்டம்
இந்த கடைகள் இருக்கும் ரங்கநாதன் தெருவுக்குள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். எதை போட்டாலும் எடுக்க முடியாத அளவுக்கு வெறும் தலைகளாகவே தெரியும். இந்த நிலையில் சென்னை தியாகராய நகர் பகுதியில் அமைந்துள்ள சூப்பர் சரவணா, சரவணா செல்வரத்தினம் ஐவுளிக் கடைகள் மற்றும் தங்க நகைக் கடைகள் மற்றும் உரிமையாளர்களின் வீடு, உள்ளிட்ட இடங்களில் கடந்த புதன்கிழமை முதல் வருமான வரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது.

குரோம்பேட்டை
புரசைவாக்கம், குரோம்பேட்டை, போரூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றோடு ரெய்டு நிறைவடைந்தது. இங்கு 4 நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத பணம் மற்றும் முதலீடுகள் தொடர்பான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் திநகரில் உள்ள கடைகளில் இன்று 5ஆவது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.

எந்த ஊழியர்களுக்கும் அனுமதி
கடந்த 5 நாட்களாக கடைக்குள் எந்த ஊழியர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அது போல் உரிமையாளர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்படுகிறது. இந்த திநகர் கடைகளில் நடத்தப்படும் சோதனை இன்றுடன் முடிவடையுமா என தெரியவில்லை. வரி ஏய்ப்பு தொடர்பாக இந்த வருமான வரி சோதனை நடைபெறுவதாக தெரிகிறது.

அண்ணாச்சி கடை
2019 ஆம் ஆண்டு ஏற்கெனவே சரவணா ஸ்டோர் அண்ணாச்சி கடைகளில் வரி ஏய்ப்பு செய்ததாக ரெய்டு நடந்தது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான தி நகர், பாடி உள்ளிட்ட 70 க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த ரெய்டு நடத்தப்பட்டது. அப்போது ரூ 434 கோடி மதிப்பிலான பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. கைப்பற்றவை கணக்கில் வராத பணம் என்றும் சொல்லப்பட்டது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications